என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம்- முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது
Byமாலை மலர்18 Oct 2019 5:10 AM GMT (Updated: 18 Oct 2019 5:10 AM GMT)
கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
குறிப்பாக பள்ளியக்ரஹாரம் பிள்ளையார் பட்டி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் கணவன் மனைவி, காதல் ஜோடிகள் மற்றும் தனியாக வருபவர்களை வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் பணத்தை மூகமுடி அணிந்து கும்பல் வழிப்பறி செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக வல்லம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. ஆனால் கொள்ளையர்களை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. மேலும் கொள்ளை சம்பவம் நடைபெறும் பகுதி காடாக இருந்ததால் கொள்ளையர்களுக்கு வசதியாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வரும் இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில், வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் கண்காணிப்பில் வல்லம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த என்ஜினீயர் கெல்வின் என்பவரிடம் வல்லம் அருகே 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வல்லம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் போலீசார் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 27) என தெரிய வந்தது. மேலும் தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்து வந்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரமேஷ், கல்லூரி மாணவிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் ரமேஷ், தன்னுடன் 3 பேரை சேர்த்து கொண்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பைபாஸ் சாலையோரத்தில் நின்றுகொண்டு அந்த வழியாக வருபவர்களை தாக்கி நகை- பணத்தை கொள்ளையடித்து வந்தான்.
மேலும் தஞ்சை பகுதியில் கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதேபோல் கள்ளக்காதல் ஜோடிகளும் இந்த பகுதிக்கு வந்து இரவு நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் குடிபோதையில் இருந்து வந்ததால் கள்ளக்காதல் ஜோடி மற்றும் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அவமானம் என்று கருதி கல்லூரி மாணவிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் யாரும் புகார் செய்யவில்லை.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான ரமேஷ் கொள்ளையடித்த நகைகளை மனைவியிடம் கொடுத்து வைத்துள்ளான். சிறிது நகைகளை தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள ராமநாதபுரம் கனரா வங்கியில் அடகு வைத்துள்ளான். அதன் பேரில் போலீசார் 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
குறிப்பாக பள்ளியக்ரஹாரம் பிள்ளையார் பட்டி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் கணவன் மனைவி, காதல் ஜோடிகள் மற்றும் தனியாக வருபவர்களை வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் பணத்தை மூகமுடி அணிந்து கும்பல் வழிப்பறி செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக வல்லம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. ஆனால் கொள்ளையர்களை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. மேலும் கொள்ளை சம்பவம் நடைபெறும் பகுதி காடாக இருந்ததால் கொள்ளையர்களுக்கு வசதியாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வரும் இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில், வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் கண்காணிப்பில் வல்லம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த என்ஜினீயர் கெல்வின் என்பவரிடம் வல்லம் அருகே 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வல்லம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் போலீசார் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 27) என தெரிய வந்தது. மேலும் தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்து வந்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரமேஷ், கல்லூரி மாணவிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் ரமேஷ், தன்னுடன் 3 பேரை சேர்த்து கொண்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பைபாஸ் சாலையோரத்தில் நின்றுகொண்டு அந்த வழியாக வருபவர்களை தாக்கி நகை- பணத்தை கொள்ளையடித்து வந்தான்.
மேலும் தஞ்சை பகுதியில் கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதேபோல் கள்ளக்காதல் ஜோடிகளும் இந்த பகுதிக்கு வந்து இரவு நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் குடிபோதையில் இருந்து வந்ததால் கள்ளக்காதல் ஜோடி மற்றும் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அவமானம் என்று கருதி கல்லூரி மாணவிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் யாரும் புகார் செய்யவில்லை.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான ரமேஷ் கொள்ளையடித்த நகைகளை மனைவியிடம் கொடுத்து வைத்துள்ளான். சிறிது நகைகளை தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள ராமநாதபுரம் கனரா வங்கியில் அடகு வைத்துள்ளான். அதன் பேரில் போலீசார் 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X