என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
Byமாலை மலர்30 Sep 2019 4:19 AM GMT (Updated: 30 Sep 2019 4:19 AM GMT)
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற (அக்டோபர்) 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
நாங்குநேரி தொகுதியில் இதுவரை 9 பேர் சுயேச்சைகளாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதேபோல விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 8 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனும், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 3-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற (அக்டோபர்) 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
நாங்குநேரி தொகுதியில் இதுவரை 9 பேர் சுயேச்சைகளாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
இதேபோல விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 8 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனும், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 3-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X