என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நாளை ஐகோர்ட்டுக்கு வருகிறார்
Byமாலை மலர்26 Sep 2019 6:54 AM GMT (Updated: 26 Sep 2019 6:54 AM GMT)
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி நாளை மதியம் 1 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகிறார்.
சென்னை:
ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து அவர் தன் பதவியை கடந்த 6ந்தேதி ராஜினாமா செய்தார்.
இவரது ராஜினாமா கடிதம் கடந்த 13ந்தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய நாளில் இருந்து ஐகோர்ட்டுக்கு, தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி வரவில்லை. இவரது ராஜினாமா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தலைமை நீதிபதியை உருப்படியான காரணத்தை கூறாமல், இடமாற்றம் செய்துள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியளவில் அவர் ஐகோர்ட்டுக்கு வருகிறார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற வக்கீல் சங்கம் நடத்தும் வழியனுப்பு விழாவில் அவர் கலந்துக் கொண்டு பேசுகிறார்.
அப்போது தன் விவகாரம் குறித்து பரபரப்பாக பேசலாம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு பேச மாட்டார் என்று மற்றொரு தரப்பு வக்கீல்கள் கூறுகின்றனர். இதனால், வக்கீல்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வி.கே. தஹில் ரமானிக்கு மூத்த வக்கீல்கள் சிலர் குழுவாக சேர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலையில் விருந்து கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், இந்த விருந்து நடைபெற உள்ளது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து அவர் தன் பதவியை கடந்த 6ந்தேதி ராஜினாமா செய்தார்.
இவரது ராஜினாமா கடிதம் கடந்த 13ந்தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய நாளில் இருந்து ஐகோர்ட்டுக்கு, தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி வரவில்லை. இவரது ராஜினாமா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தலைமை நீதிபதியை உருப்படியான காரணத்தை கூறாமல், இடமாற்றம் செய்துள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியளவில் அவர் ஐகோர்ட்டுக்கு வருகிறார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற வக்கீல் சங்கம் நடத்தும் வழியனுப்பு விழாவில் அவர் கலந்துக் கொண்டு பேசுகிறார்.
அப்போது தன் விவகாரம் குறித்து பரபரப்பாக பேசலாம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு பேச மாட்டார் என்று மற்றொரு தரப்பு வக்கீல்கள் கூறுகின்றனர். இதனால், வக்கீல்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வி.கே. தஹில் ரமானிக்கு மூத்த வக்கீல்கள் சிலர் குழுவாக சேர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலையில் விருந்து கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், இந்த விருந்து நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X