search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு

    டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் நேற்று 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால் இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கால்வாய் பாசனத்திற்கு 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியிலேயே நீடிக்கிறது.

    Next Story
    ×