search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி - கிரண் பேடி
    X
    நாராயணசாமி - கிரண் பேடி

    பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி

    பிரதமர் மோடியின் 69-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் பாஜக தொண்டர்கள் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை முதலே பாஜக தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயண சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நல்ல உடல் நலத்துடன் பிரதமர் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என  பதிவிட்டுள்ளார்

    அதேபோன்று, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ‘நாட்டுக்கு அதிகபட்சமாக சேவை செய்ய உங்களுக்கு உதவும் வகையில் கடவுள் உங்களை சிறந்த ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்க வேண்டும்.

    ஒவ்வொரு இந்தியரின் செழிப்புக்காக வாழ்நாள் முழுவதையும் கொடுத்துள்ள உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற வேண்டும். உங்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    உங்கள் தலைமை தாங்கும் குணங்களுக்காக முழு உலகமும் உங்களை கவனிக்கிறது. நீங்கள் இன்று உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஓர் உத்வேகம் ஆவீர்கள்’ என கூறியுள்ளார்.



    Next Story
    ×