search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐவர்பாணி அருவியில் செம்மண் நிறத்தில் தண்ணீர் வரும் காட்சி.
    X
    ஐவர்பாணி அருவியில் செம்மண் நிறத்தில் தண்ணீர் வரும் காட்சி.

    கர்நாடக அணைகளில் இருந்து 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    கர்நாடகாவில் இன்று 2 அணைகளில் இருந்தும் நீர்திறப்பு 21 ஆயிரத்து 725 கனஅடியாக குறைக்கப்பட்டது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 16 ஆயிரத்து 225 கனஅடியும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரத்து 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
    ஒகேனக்கல்:

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த மாதம் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 90 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக 63 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று 2 அணைகளில் இருந்தும் நீர்திறப்பு 21 ஆயிரத்து 725 கனஅடியாக குறைக்கப்பட்டது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 16 ஆயிரத்து 225 கனஅடியும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரத்து 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 69 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி, ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 8-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இன்று 36-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
    Next Story
    ×