என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலியை தேடி சென்னை வந்த கல்லூரி மாணவர் - காதலியின் தாயாரிடம் சிக்கி கொண்டார்
Byமாலை மலர்10 Sep 2019 9:02 AM GMT (Updated: 10 Sep 2019 9:02 AM GMT)
கோவையில் இருந்து இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கமான காதலியை பார்க்க வந்த கல்லூரி மாணவர் காதலியின் தாயாரிடம் சிக்கி கொண்டார்,
போரூர்:
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (18). முதலாமாண்டு கல்லூரி மாணவர்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் சென்னை கே.கே. நகர் மேற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி நண்பராக அறிமுகமானார். 6 மாதங்களாக தொடர்ந்து இருவரும் பதிவு போட்டு பழகி வந்தனர்.
இந்த நிலையில் விக்ணேஷ் மாணவியை நேரில் சந்தித்து பேசுவதற்காக அவரை தேடி நேற்று சென்னை கே.கே. நகருக்கு வந்தார். மாணவியை நேரில் சந்தித்த விக்ணேஷ் தன்னுடன் மாணவியை அருகில் உள்ள இடத்திற்கு அழைத்து சென்றார்.
இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். இதை கண்ட மாணவியின் தாயார் கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் விக்னேசை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
“நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் இன்ஸ்டாகிராமில் படத்தில் மட்டும் பார்த்து வந்த காதலியை நேரில் பார்க் விரும்பினேன். காதலி அழைத்ததின் பேரில் சென்னைக்கு வந்தேன்” என்று கூறினார்.
இதையடுத்து விக்னேஷ் தந்தைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்று காலை அவர் போலீஸ் நிலையம் வந்தார். அவர் முன்னிலையில் விக்னேசை எச்சரித்த போலீசார், அவரை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (18). முதலாமாண்டு கல்லூரி மாணவர்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் சென்னை கே.கே. நகர் மேற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி நண்பராக அறிமுகமானார். 6 மாதங்களாக தொடர்ந்து இருவரும் பதிவு போட்டு பழகி வந்தனர்.
இந்த நிலையில் விக்ணேஷ் மாணவியை நேரில் சந்தித்து பேசுவதற்காக அவரை தேடி நேற்று சென்னை கே.கே. நகருக்கு வந்தார். மாணவியை நேரில் சந்தித்த விக்ணேஷ் தன்னுடன் மாணவியை அருகில் உள்ள இடத்திற்கு அழைத்து சென்றார்.
இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். இதை கண்ட மாணவியின் தாயார் கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் விக்னேசை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
“நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் இன்ஸ்டாகிராமில் படத்தில் மட்டும் பார்த்து வந்த காதலியை நேரில் பார்க் விரும்பினேன். காதலி அழைத்ததின் பேரில் சென்னைக்கு வந்தேன்” என்று கூறினார்.
இதையடுத்து விக்னேஷ் தந்தைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்று காலை அவர் போலீஸ் நிலையம் வந்தார். அவர் முன்னிலையில் விக்னேசை எச்சரித்த போலீசார், அவரை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X