என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே அட்டை பெட்டிகளில் பதுக்கிய புகையிலை பொருட்கள் - வாலிபர்களிடம் விசாரணை
கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே காப்பிளியப்பட்டியில் சாலையோரம் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டுகள், ராம்குமார், சக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது 4 அட்டை பெட்டிகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கன்னிவாடி 7-வது வார்டைச் சேர்ந்த உசேன் மகன் சிக்கந்தர் (வயது 32), சாகுல் அமீது மகன் ரபீக் (30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனை எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? எங்கு விற்பனைக்காக அனுப்ப திட்டமிட்டு இருந்தனர்? இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்