search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர், ஆக. 22-

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணை களுக்கு நீர்வரத்து சரிந்தது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக் கப்பட்டு தற்போது 11 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஒகேனக்கலில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரம் கன அடியாக வந்து கொண் டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப் படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 116.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 116.53 அடியானது.

    கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. அதன் படி மழை பெய்யும் பட்சத்தில் கபினி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது கபினி அணை யில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×