என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்14 Aug 2019 5:55 AM GMT (Updated: 14 Aug 2019 5:55 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (வயது 23). இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
சுரேஷின் வீட்டிற்கு அய்யப்பன் அடிக்கடி வந்து சென்றதால் அகிலா உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் கள்ளத்தொடர்பு உருவானது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து கடந்த மே மாதம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.
இதுபற்றி சுரேஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அகிலாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெளியூரில் தங்கி இருந்த அய்யப்பன், அகிலா இருவரும் நேற்று இரவு விளாரிப்பட்டு அடுத்த கோவிலூர் ஏரிக்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை ஏரிக்கு சென்றவர்கள் அய்யப்பன், அகிலா பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (வயது 23). இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
சுரேஷின் வீட்டிற்கு அய்யப்பன் அடிக்கடி வந்து சென்றதால் அகிலா உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் கள்ளத்தொடர்பு உருவானது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து கடந்த மே மாதம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.
இதுபற்றி சுரேஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அகிலாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெளியூரில் தங்கி இருந்த அய்யப்பன், அகிலா இருவரும் நேற்று இரவு விளாரிப்பட்டு அடுத்த கோவிலூர் ஏரிக்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை ஏரிக்கு சென்றவர்கள் அய்யப்பன், அகிலா பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X