search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட முத்தரசி
    X
    கொலை செய்யப்பட்ட முத்தரசி

    கல்லூரி மாணவியை கடத்தி கொன்று உடலை எரித்த வாலிபர்- தாயுடன் கைது

    வேடசந்தூரில் கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த காதலன் அதை மறைத்து வேறு பெண்னை திருமணம் செய்தார். இது தொடர்பாக காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற வீரமலை. ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் முத்தரசி (வயது 19). இவர், வேடசந்தூரை அடுத்த நவாமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவருடைய அக்காள் தமிழரசி. இவர், திருமணமாகி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆத்துக்கால்புதூரில் வசித்து வருகிறார்.

    தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி முத்தரசி சென்று வந்தார். அப்போது ஆத்துக் கால்புதூரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் பரத் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென முத்தரசி மாயமானார். இதை தொடர்ந்து முத்தரசியை அவரது பெற்றோர், உறவினர்கள் தேடினர். இது குறித்து முத்தரசியின் அக்காள் தமிழரசி, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். பின்னர் பரத்திடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முத்தரசியை பாரத் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    திருமண ஆசைகாட்டி முத்தரசியை கடத்தி சென்ற பாரத் ஆத்துக்கால்புதூரில் தனியாக ஒரு வீடு எடுத்து குடிவைத்திருந்தார். சில நாட்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஒருநாள் பாரத் தனது வாகனத்தில் முத்தரசியை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு பாரத் முத்தரசியை கடுமையாக தாக்கினார். இதில் முத்தரசி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதையடைத்து பாரத் முத்தரசி உடலை வாகனத்தில் தூக்கிப்போட்டு ஆத்துக்கால்புதூரில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். அதிர்ச்சி அடைந்த பரத்தின் குடும்பத்தினர், வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் முத்தரசியின் உடலை புதைத்து விட்டனர்.

    அதன்பிறகு வீராட்சி மங்கலத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை பரத்துக்கு நிச்சயம் செய்தனர். திருமண காரியம் நடக்கும் போது, வீட்டில் பிணம் புதைக்கப்பட்டிருப்பது, குடும்பத்திற்கு நல்லதல்ல என்று பாரத்தின் பெற்றோர் கருதினர். இதனால் திருமணத்திற்கு முன்பு, முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து அருகே உள்ள பொட்டல் காட்டிற்கு கொண்டு சென்று எரித்தனர். அதன் பிறகு எதுவுமே நடக்காதது போல பாரத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இருந்து விட்டனர்.

    மேலும் 2-வதாக நிச்சயம் செய்த பெண்ணை, கடந்த வைகாசி மாதம் பாரத்துக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து பாரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாரத்தின் தாய் லட்சுமி, உறவினர் குமார்(60) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொடூர கொலை தொடர்பாக டி.எஸ்.பி., சிவக்குமார், வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். ஆத்துக் கால்புதூரில் முத்தரசியை கொலை செய்து உடலை புதைத்த இடத்தை தோண்டி, அதில் வேறு ஏதும் தடயங்கள் சிக்குகிறதா என்றும் சோதனை நடத்த உள்ளனர்.

    கல்லூரி மாணவியை காதலனே கடத்தி கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×