என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன்- நடிகர் எஸ்.வி.சேகர்
Byமாலை மலர்23 July 2019 4:46 AM GMT (Updated: 23 July 2019 4:46 AM GMT)
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யா கூறிய கருத்தை எதிர்ப்பதாக பொள்ளாச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடைபெறும் காமெடி தர்பார் என்னும் நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் பொள்ளாச்சி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நாடக துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களை ரசிகர்கள் வரவேற்க வேண்டும். நாடகக் கலையின் வளர்ச்சிக்கு அரசு உதவுவது இல்லை. இந்துகளின் கோவிலை இந்துகளிடமே அரசு ஒப்படைக்க வேண்டும். நாடக கலைஞர்களை நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. நாடக நடிகர்களுக்கு அதிகம் உதவி செய்தவர் ராதாரவி தான். நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. விஷால் பொறுப்பில் இருந்தபோது தான் நடிகர் சங்கத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது.
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
தகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது. ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார். விரைவில் தமிழகத்தில் 4 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். மழைநீர் சேகரிப்பில் மக்களின் பங்களிப்பு அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடைபெறும் காமெடி தர்பார் என்னும் நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் பொள்ளாச்சி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நாடக துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களை ரசிகர்கள் வரவேற்க வேண்டும். நாடகக் கலையின் வளர்ச்சிக்கு அரசு உதவுவது இல்லை. இந்துகளின் கோவிலை இந்துகளிடமே அரசு ஒப்படைக்க வேண்டும். நாடக கலைஞர்களை நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. நாடக நடிகர்களுக்கு அதிகம் உதவி செய்தவர் ராதாரவி தான். நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. விஷால் பொறுப்பில் இருந்தபோது தான் நடிகர் சங்கத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது.
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
தகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது. ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார். விரைவில் தமிழகத்தில் 4 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். மழைநீர் சேகரிப்பில் மக்களின் பங்களிப்பு அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X