என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கக்கோரி 26-ந்தேதி பாராளுமன்றம் முற்றுகை - பிஆர் பாண்டியன்
மன்னார்குடி:
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சிக்கு கடந்த 2015 முதல் புதிய கிணறுகள் அமைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் கச்சா என்ற பெயரில் ஹைட்ரோகார்பன் , பாறை எரிவாயு எடுக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓ.என்.ஜி.சி.க்கு தடை விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (23-ந் தேதி) தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிக்கரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தெரிவிப்போம். மேலும் இந்த திட்டத்தை கைவிட கோரி டெல்லி பாராளுமன்றம் முன்பு வருகிற 25-ந் தேதி உண்ணாவிரதமும், 26-ந் தேதி முற்றுகை போராட்டமும் நடைபெற உள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து கலந்து கொள்கிறார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்க கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்