search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    மாதவரம் போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் செம்பியம், மாதவரம், புழல், செங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் வசித்து வருகின்றனர்.

    பெரம்பூர் செம்பியம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் கோதண்டபாணி. போலீஸ் குடியிருப்பு முதல் மாடி ஏ பிளாக்கில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூருக்கு சென்று இருந்தார்.

    இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதை கண்டு தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது.

    இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே காவலர் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுபோனது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×