search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மனைவியின் தோழி கற்பழிப்பு- வாலிபர் கைது
    X

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மனைவியின் தோழி கற்பழிப்பு- வாலிபர் கைது

    ஊத்துக்கோட்டையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மனைவியின் தோழியை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது22). இவருக்கும் கவரைப்பேட்டையை அடுத்த கிளிக்கோடி கிராமத்தைச் சேர்ந்த சர்மிளா என்பவருக்கும் திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஓன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கிளிக்கோடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    சர்மிளாவின் தோழியான 24 வயது பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை சிலம்பரசன் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை கூறி மிரட்டி பலமுறை அவரை சிலம்பரசன் கற்பழித்ததாக தெரிகிறது. கர்ப்பமான இளம்பெண் கடந்த 21-ந் தேதி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில், தன்னை ஏமாற்றியும், மிரட்டியும் கற்பழித்து கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கு தாய் ஆக்கியது குறித்து சிலம்பரசன் மீது கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    Next Story
    ×