search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    பென்னாகரம் அருகே 4 வீடுகளில் கொள்ளை- போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த குமார், கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகிய 4 பேர் வீடுகளில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொள்ளை நடந்துள்ளது.

    4 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    குமார் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவரது சட்டைப் பையில் இருந்த 3500 ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்தனர்.

    கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகியோர் வீடுகளில் நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

    4 வீடுகளையும் சேர்த்து ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. குமார், கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகிய 4 பேரும் தங்கள் வீடுகளில் நேற்று இரவு 11.30 மணி வரை பேசி விட்டு அவர்களது வீடுகளை பூட்டிவிட்டு வேறு வீட்டில் தூங்கினர்.

    நகை உள்ள இரும்பு பெட்டி உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    இதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடநத்தி வருகிறார்கள்.

    சமீப காலமாகவே பென்னாகரம், இண்டூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடந்து வருகிறது. பென்னாகரம் டவுனிலும், பி.அக்ரஹாரம், ஜெட்டூர் ஆகிய பகுதிகளிலும் கொள்ளை நடந்தது.

    இண்டூரிலும், எர்ர பையன அள்ளியிலும் கொள்ளை நடந்தது. இப்படி தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ஏதோ ஒரு கொள்ளை கும்பல் அந்த பகுதியில் திட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இண்டூர் அருகே கொள்ளையர்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு கொள்ளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×