search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலி
    X

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலி

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Swineflu #Dengue

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் இல்லை.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 98 பேர் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற மீனாட்சி கிருஷ்ணம்மாள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்திவேல் (வயது1). காய்ச்சலால் அவதிப்பட்ட சக்திவேலை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சக்தி வேல் பரிதாபமாக இறந்தது.

    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலை சேர்ந்த ராமசாமி மனைவி விஜய லட்சுமி (52). கடந்த ஒரு வாரமாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue

    Next Story
    ×