என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலி
மதுரை:
மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் இல்லை.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 98 பேர் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற மீனாட்சி கிருஷ்ணம்மாள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்திவேல் (வயது1). காய்ச்சலால் அவதிப்பட்ட சக்திவேலை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சக்தி வேல் பரிதாபமாக இறந்தது.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலை சேர்ந்த ராமசாமி மனைவி விஜய லட்சுமி (52). கடந்த ஒரு வாரமாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்