search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியது

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கி உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 14ஆயிரத்து 232 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து 9ஆயிரத்து 35 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 13ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கனஅடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கி உள்ளது.

    நேற்று 105.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 104.89 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×