என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன - வீடியோ
Byமாலை மலர்19 Aug 2018 11:39 PM GMT (Updated: 19 Aug 2018 11:43 PM GMT)
கொள்ளிடம் பழைய பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருச்சி:
முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.
இதனால், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் கொள்ளிடம் பழைய பாலம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர்.
அடுத்த சில தினங்களில் இந்த விரிசல் அதிகமாகி இரண்டாக பாலம் உடைந்தது. நேற்று நள்ளிரவு பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கியது. எனினும், நள்ளிரவில் தூண்கள் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை
இந்நிலையில், பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் பிரத்யேக காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.
இதனால், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் கொள்ளிடம் பழைய பாலம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர்.
அடுத்த சில தினங்களில் இந்த விரிசல் அதிகமாகி இரண்டாக பாலம் உடைந்தது. நேற்று நள்ளிரவு பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கியது. எனினும், நள்ளிரவில் தூண்கள் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை
இந்நிலையில், பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் பிரத்யேக காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X