என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததால் மாமனார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மருமகன்
Byமாலை மலர்12 Aug 2018 8:14 AM GMT (Updated: 12 Aug 2018 8:14 AM GMT)
மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததால் மாமனார் வீட்டின் மீது மருமகன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbomb
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை பேராச்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் செல்வி (வயது30). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சரவணன்(32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் செல்வி தூத்துக்குடியில் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி வண்ணார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் சரவணனிடம் இருந்து விவாகரத்து கேட்டு செல்வி நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
உடனே சரவணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வெளியில் வந்த செல்வி, அவரது தந்தை முத்துராமலிங்கம் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.
இன்று காலை பாளை பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விவகாரத்து வழக்கு தொடர்பாக செல்வியை மிரட்டும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான சரவணன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbomb
நெல்லை வண்ணார் பேட்டை பேராச்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் செல்வி (வயது30). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சரவணன்(32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் செல்வி தூத்துக்குடியில் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி வண்ணார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் சரவணனிடம் இருந்து விவாகரத்து கேட்டு செல்வி நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி வீட்டருகே நின்று ரகளை செய்தாராம். நேற்றிரவு குடிபோதையில் சரவணன், செல்வியின் வீட்டுக்கு வந்தார். திடீரென செல்வின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார். இதனால் அந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டின் முன்பு நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் சேதமாகின.
உடனே சரவணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வெளியில் வந்த செல்வி, அவரது தந்தை முத்துராமலிங்கம் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.
இன்று காலை பாளை பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விவகாரத்து வழக்கு தொடர்பாக செல்வியை மிரட்டும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான சரவணன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbomb
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X