search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி கடத்தல்
    X

    நாகர்கோவில் அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி கடத்தல்

    நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவியை வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவரை நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்தார்.  இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். இருந்தாலும் அந்த வாலிபர், மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த வாலிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி சென்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.

    அவரை அருகில் உள்ள உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனது மகளை அந்த வாலிபர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்- இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வாலிபர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×