search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலி

    கோவையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர்(வயது 20). கரும்புகடையை சேர்ந்தவர் செய்யது தவுபிக்(20). நண்பர்களான இவர்கள் இருவரும் கார் டிங்கரிங் வேலை செய்து வந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று இரவு பீளமேடு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பீளமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அபுதாகிர், தவுபிக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பலியான இருவரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accidentcase

    Next Story
    ×