என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடிய விடிய கன மழை - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்16 July 2018 3:51 AM GMT (Updated: 16 July 2018 3:51 AM GMT)
தேனி மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கம்பம்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வந்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் வயர்கள் அறுந்தும் விழுந்தன. இரவு முழுவதும் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத் தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கன மழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்தபடி இருந்தது.
மரங்கள் முறிந்து விழுந்த இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் நெடுஞ்சாலை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவிக்கையில், தேனி மாவட்டம் முழுவதும் கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கன மழை நீடித்து வருவதால் தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள கொடைக்கானலிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வந்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் வயர்கள் அறுந்தும் விழுந்தன. இரவு முழுவதும் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத் தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கன மழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்தபடி இருந்தது.
மரங்கள் முறிந்து விழுந்த இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் நெடுஞ்சாலை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவிக்கையில், தேனி மாவட்டம் முழுவதும் கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கன மழை நீடித்து வருவதால் தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள கொடைக்கானலிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X