search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பு சுவற்றில் மோதி லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    தடுப்பு சுவற்றில் மோதி லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    தூத்துக்குடியில் ரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி

    தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி ரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் முந்திரி தொழிற்சாலைக்கு முந்திரி கொட்டை ஏற்றி கொண்டு சரக்கு பெட்டக லாரி ஒன்று இன்று அதிகாலை தூத்துக்குடி நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்றது. லாரியை நெல்லை மாவட்டம் சிவகிரி சங்குபுரத்தை சேர்ந்த வெற்றிவேல்(வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். லாரி வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து டோல்கேட் தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து லாரி தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதில் டிரைவர் பலத்த காயமடைந்தார். அவரை டோல்கேட் ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டை எரிந்து நாசமானது. இது குறித்து புதுக்கோட்டைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tamilnews
    Next Story
    ×