search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் 25-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
    X

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் 25-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் 25-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PRPandian #Metturdam

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் வருகிற 25-ந் தேதி(திங்கட்கிழமை) குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். அதற்கு காரணம் எந்த ஒரு ஆறும் தூர்வாரப்படவில்லை. பாசன மதகுகள், கட்டமைப்புகள் பராமரிப்பு பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Metturdam

    Next Story
    ×