என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் 16-ந்தேதி சுற்றுப்பயணம் - கமல்ஹாசன், 12 இடங்களில் பொதுமக்களை சந்திக்கிறார்
Byமாலை மலர்14 May 2018 9:38 AM GMT (Updated: 14 May 2018 9:38 AM GMT)
கன்னியாகுமரியில் வருகிற 16-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், 12 இடங்களில் பேச திட்டமிட்டுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
நாகர்கோவில்:
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்கள், விவசாயிகளை சந்திக்கிறார். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுகிறார். இதற்காக நாளை (15-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் கமல்ஹாசன் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கமல்ஹாசன் கன்னியாகுமரி வருகிறார். இரவு அங்குள்ள ஓட்டலில் அவர் தங்குகிறார்.
மறுநாள் 16-ந்தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரி ரவுண்டானாவில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பிறகு அங்கிருந்து கீழமணக்குடி சென்று மீனவ மக்கள் மத்தியில் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
அதன் பிறகு குளச்சல் பஜார், திங்கள்சந்தை, கருங்கல் போன்ற இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசும் கமல்ஹாசன் புதுக்கடை வழியாக சின்னத்துறை சென்று பேசுகிறார்.
அங்கிருந்து புறப்படும் கமல்ஹாசன் களியக்காவிளை, அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் பேசிவிட்டு ஆசாரிபள்ளம் வழியாக ராஜாக்கமங்கலம் வந்தடைகிறார். அங்கு வேனில் இருந்தபடி பொதுமக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
தொடர்ந்து நாகர்கோவில் செட்டிகுளம் வழியாக மாலை 6 மணிக்கு வடசேரி வருகிறார். கமல்ஹாசன் வருகையையொட்டி வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மேடை அமைக்கப்படுகிறது. அந்த மேடையில் இருந்தபடி அவர் பொதுமக்களிடம் பேசுகிறார். நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு கார் மூலம் இரவு கன்னியாகுமரி செல்லும் கமல்ஹாசன் அங்கு தங்குகிறார்.
மறுநாள் 17-ந்தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்படும் கமல்ஹாசன் கூடங்குளம் வழியாக தூத்துக்குடி சென்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 18-ந்தேதி நெல்லை, விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்கிறார்.
கமல்ஹாசன் குமரி மாவட்டம் வருகையையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X