search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னை அருகே விவசாயி வெட்டி கொலை
    X

    பொன்னை அருகே விவசாயி வெட்டி கொலை

    பொன்னை அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    பொன்னை அடுத்த மேல்பாடி அருகே பாலமுத்தூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 58) .இவரது மனைவி ஜோதி தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக இருக்கின்றனர். ஜோதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். உதயகுமார் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உதயகுமார் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவரை நள்ளிரவில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து பிணத்தை வீட்டின் அருகே வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் மேல்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உதயகுமார் உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்

    முதற்கட்ட விசாரணை யில் முன்விரோத காரணமாக உதயகுமார் கொலை செய்யபட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×