search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி வெட்டி கொலை"

    சூளகிரி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆபிரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (வயது 70). மோட்டப்பாவின் வீட்டின் அருகே அவரது தம்பி சின்னப்பா என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், சிவபிரகாஷ் (வயது 29) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோட்டப்பாவுக்கும் சின்னப்பாவுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன் தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் அங்கு வந்த சின்னப்பாவின் மகன் சிவபிரகாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது பெரியப்பா மோட்டப்பாவின் வலது காலை வெட்டினார். இதில் அவரது வலது கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சிவபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மோட்டாப்பாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவபிரகாசை தேடி வந்தனர். அப்போது ஓசூரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த அவரை கைது செய்தனர். கைதான சிவபிரகாஷை ஓசூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    ×