என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் விளையாடாமல் உள்ளார்.
    • ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

    2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது.

    இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.

    ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.

    • சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டுக்கான CEAT சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது
    • அணிக்கு தேவை என்றால் 9-வது இடத்தில் பேட்டிங் செய்யவும் தயார்.

    இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது அவரிடம் ஆசிய கோப்பை தொடரில் அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு சாம்சன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார். இந்திய ஜெர்சியை அணிந்து அந்த டிரஸ்ஸிங் அறையில் தங்க நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். என் நாட்டிற்காக என் வேலையைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    அணிக்கு தேவை என்றால் 9-வது இடத்தில் பேட்டிங் செய்யவும், இடது கை சுழற்பந்து வீச்சாளரை போல் பவுலிங் செய்யவும் கூட செய்வேன். நாட்டுக்காக எந்த வேலையாக இருந்தாலும், எனக்கு அது கவலையில்லை.

    சமீபத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தேன். ஆனால் அதில் மொத்தமாக 40 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எண்கள் என்ன கூறுகிறது என்பதை விட நான் தற்போது இருக்கும் நிலையை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் நான் கடந்து வந்த சவால்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு சாம்சன் கூறினார்.

    • மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பை வென்றது.
    • அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை.

    இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.

    அப்போது "டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது. அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி" என தெரிவித்தார்.

    அவர் கூறுவது போல, மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

    இந்தசூழலில் 11 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக ரோகித் சர்மா வென்றுகொடுத்தார். இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

    • சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    சிஏட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இது கிரிக்கெட் உலகில் வீரர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் முதல் விருது திட்டங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருது வழங்கும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    அதில் விருந்தினர்களை மகிழ்விக்க, வைரல் மிமிக்ரி கலைஞர் ஷாரங் ஷ்ரிங்கர்பூர் கலந்து கொண்டார். அவர் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, ரிக்கி பாண்டிங் மற்றும் டேனி மோரிசன் ஆகியோரை அவர் போல சிறப்பாக நடித்தார்.

    குறிப்பாக எம்.எஸ். தோனி போல மிமிங்கிரி செய்தார். அதனை கண்ட ரோகித் சர்மா விழுந்து விழுந்து சிரிப்பார். மேலும் அவர் பின்னாடி அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் அருகில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கனே வில்லியம்சனிடமும் அவரே மாதிரியே பேசுறாங்க என்பது போல சைகை காட்டுவார். சிரித்து சிரித்து கண்ணில் நீர் சிந்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கேஎல் ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாத்னை படைத்துள்ளார். அதேபோல கேஎல் ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை.

    அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

    ஆல்ரவுண்டரில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.

    • சாஹல், தனஸ்ரீ தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
    • சாஹல், தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.

    இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2 ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறி செல்கிறேன். நான் மீண்டும் இதை பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
    • அனைத்து அணியும் 2 போட்டிகளில் விளையாடி உள்ளது.

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கான போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது.

    இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அனைத்து அணியும் 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இடத்திலும் இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது.

    அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் 1 போட்டியில் வெற்றி 1-ல் தோல்வி என 3,4,5 இடங்கள் முறையே உள்ளனர்.

    2 போட்டிகளிலும் தோல்வியடைந்தவர்களில் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 6,7,8 இடங்களில் உள்ளனர். ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்க சரியானவர் என்று நினைக்கிறேன்.
    • முதலில் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை சம்பாதிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவ கேப்டனாக சுப்மன் கில் வளர்க்கப்பட்டு வருகிறார். ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படத் தகுதியானவர் என்றும் ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்தியாவை கேப்டனாக தலைமைத் தாங்க சரியானவர் என்றும் முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்க சரியானவர் என்று நினைக்கிறேன். அதற்குத் தகுதியானவர் என்பதை அவரும் காண்பித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய நம்பர்கள் நன்றாக இருக்கிறது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயரை அவர்கள் கேப்டனாக்க பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

    முதலில் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை சம்பாதிக்க வேண்டும். ஏனெனில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களுடைய வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சஞ்சு சாம்சன் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரும் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சுப்மன் கில் நன்மைக்காக ஆசியக் கோப்பை அவருக்கு நன்றாக சென்றிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அபிஷேக் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் 2-வது ஓப்பனிங் இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது.

    அங்கே ஜெய்ஸ்வால், சாம்சன் போன்றவர்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். கில் தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும். அவர் கேப்டன் என்பதற்காக இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் இப்போதெல்லாம் ஒரே நாள் இரவில் மாறக்கூடியதாக இருக்கிறது. துணைக் கேப்டன் என்பது உறுதியான பொறுப்பல்ல. இந்திய அணியில் நிறைய துணைக் கேப்டன்கள் இருக்கிறார்கள் அல்லவா.

    என்று உத்தப்பா கூறினார்.

    • நாங்கள் பலமுறை அந்தக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்துவிட்டோம்.
    • ஆனால் எங்களால் அந்தக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9-வது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் இந்திய அணியின் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களால் துபாயில் நடைபெற்றன.

    இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டியை எட்டியது.

    இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக சாம்பியன் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்நிலையில் நான் அந்த அணியை விரும்புகிறேன் என சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அந்த அணியை விரும்புகிறேன். அவர்களுடன் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது ஒரு வருட உழைப்பு அல்லது இரண்டு வருட உழைப்பு பற்றியது அல்ல.

    நாங்கள் பலமுறை அந்தக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்துவிட்டோம். ஆனால் எங்களால் அந்தக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    அங்குதான் எல்லோரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதை ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் செய்ய முடியாது. அந்த எண்ணத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அணியிடமிருந்து மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் டி20 உலகக் கோப்பைக்காகவும், பின்னர் சாம்பியன்ஸ் டிராபிக்காகவும் திட்டமிட்டபோது எனக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் அது உதவியது.

    என ரோகித் சர்மா கூறினார்.

    • ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.

    2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.

    அதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சில அதிரடி மாற்றங்கள் அவ்வபோது இந்திய அணியில் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வெளிநாட்டு தொடர்களில் இடம் கிடைக்காத விரக்தியில் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரோகித், விராட் ஆகியோர் ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் அரங்கேறி உள்ளது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கர் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை கம்பீர் உருவாக்கினார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறினார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெற கவுதம் கம்பீரே காரணம் மூத்த வீரர்கள் கம்பீரின் முடிவுகளை எதிர்க்கலாம் என்பதால் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை உருவாக்கினார்.

    இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
    • இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிகவும் பழமையான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதுகுவலி பிரச்சனை காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் குணமடையாத பட்சத்தில் முழு தொடரையும் அவர் இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் விலகினால் ஆஸ்திரேலிய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும்.

    அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வெள்ளை தொடரில் இருந்து விலகினார். அடுத்து தொடங்கவிருக்கும் இந்திய தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 12-ந்தேதி மோதுகிறது.
    • ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார்.

    இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

    பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 12-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்படுகிறது.

    23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய முன்னாள் கேப்டனான மிதாலிராஜ், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (232 ஆட்டத்தில் 7,805 ரன்) என்ற சாதனைக்குரியவர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கல்பனா 7 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் அவரது பிரவேசம் இந்த மண்டலத்தில் இருந்து அருந்ததிரெட்டி, மேகனா, ஸ்ரீசரனி உள்ளிட்டோர் இந்திய அணிக்குள் நுழைய உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

    ×