என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
- இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.
பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட்லீயின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.
அபுதாபி:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் டி20 150-க்கு கூடுதலான விக்கெட்டும் ஒருநாளில் 200-க்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய வீரராவார்.
ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தில் ரஷித்கான் உள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் சவுத்தி 174 டி20 விக்கெட்டும் 221 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீயின் சாதனையையும் ரஷித் கான் முறியடித்துள்ளார். குறைந்த ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் (101 போட்டிகள்), ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் (102 போட்டிகள்), இந்திய வீரர் முகமது ஷமி (103 போட்டிகள்) நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (106 போட்டிகள்) ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (107 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
- தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை.
இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
காயம் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வு செய்வது தேர்வு குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை.
நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அல்லது இன்னும் சிறிது நேரம் தேவை என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் கைகளில் உள்ளது.
இவ்வாறு முகமது ஷமி கூறினார்.
கிட்டதட்ட முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது.
- அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது.
புதுடெல்லி:
அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது நாளிலேயே இமாலய வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் இரு நாளில் பேட்டிங்குக்கும், 3-வது நாளில் இருந்து சுழலுக்கும் ஒத்துழைக்கும் என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது இந்த டெஸ்டிலும் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். அந்த நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பணம் கொழிக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதால், டெஸ்ட் கிரிக்கெட் நலிந்து போய் விட்டது.
இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சேமி கூறுகையில், 'நாங்கள் இந்திய மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரை 1983-ம் ஆண்டில் கைப்பற்றினோம். அப்போது நான் பிறந்தேன். இப்போது அணியின் பயிற்சியாளராக இருப்பதால் என்னை தான் அனைவரும் விமர்சிப்பார்கள் என்பது தெரியும். ஆனால் இந்த நிலைமை 2 ஆண்டுக்கு முன்பு வந்ததில்லை.
வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட மறுக்கும் கலாசாரம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால் இது புற்றுநோய் போன்றது. அடிப்படை கட்டமைப்பில் ஆழமாக ஊடுருவிவிட்டது. எனவே பிரச்சினை ஆடுகளத்தில் இல்லை. அணியின் கட்டமைப்பில் உள்ளது. இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட யார் ஆர்வமாக இருக்கிறார்களோ அத்தகைய வீரர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது. அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது. போதிய ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் அணியின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கும்' என்றார்.
- மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
- சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான்.
மதுரை:
வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.
- முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டாலும் மிடில் வரிசையில் விக்கெட் சரிவு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
- ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 33 முறை மோதியிருக்கின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் பதம் பார்த்தது.
ஆனால் இந்தியாவுக்கு இனி தான் உண்மையான சவால் ஆரம்பிக்கப்போகிறது. அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அரைஇறுதி வாய்ப்புக்குரிய அணிகளுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது.
இதில் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டாலும் மிடில் வரிசையில் விக்கெட் சரிவு பலவீனமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-5 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். இத்தகைய குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 50 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிர்தி மந்தனா, நடப்பு தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப (8 மற்றும் 23 ரன்) ஜொலிக்கவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் ரன்வேட்டை நடத்தினால் அணிக்கு அனுகூலமாக இருக்கும். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, கிரந்தி கவுட், சினே ராணா வலு சேர்க்கிறார்கள். காய்ச்சலால் முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ஆல்-ரவுண்டர் அமன்ஜோத் கவுர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என தெரிகிறது. 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்து இந்தியா வியூகங்களை தீட்டி வருகிறது.
லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 69 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலேயே எழுச்சி பெற்ற தென்ஆப்பிரிக்கா 232 ரன் இலக்கை 40.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. தஸ்மின் பிரிட்சின் சதமும் (101 ரன்), மிலாபாவின் சுழல் ஜாலமும் (4 விக்கெட்) தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு கடும் போட்டி அளிக்க காத்திருக்கிறார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 33 முறை மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரனி, கிரந்தி கவுட், ரேணுகா சிங் அல்லது அமன்ஜோத் கவுர்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், மரிஜானே காப், அனேகே பாஷ், சினாலோ ஜாப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயபோங்கா காகா, நோங்குலுலேகா மிலாபா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் பேட் செய்த வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ், அஹமத் ஷா ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 40 ரன்கள் எடுத்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி 33 ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.
- மும்பை, மகாராஷ்டிரா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் புனேவில் நடைபெற்றது.
- சிறப்பாக ஆடிய மகாராஷ்டிரா அணியின் பிரித்வி ஷா 220 பந்தில் 181 ரன்கள் குவித்தார்.
மும்பை:
ரஞ்சிக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் புனே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக ஆடிய மகாராஷ்டிரா அணியின் பிரித்வி ஷா 220 பந்தில் 181 ரன்கள் குவித்தார். மேலும், ஆசின் குல்கர்னியுடன் இணைந்து 305 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
இந்நிலையில், சிறப்பாக விளையாடிய பிரித்விஷா அவுட்டானபோது, அவரை கிண்டல் செய்யும் விதமாக 'தேங்க் யூ' என முஷீர் கான் நக்கல் செய்துள்ளார். இவர் சர்பராஸ் கானின் சகோதரர் ஆவார்.
ஏற்கனவே மும்பை அணியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் பிரித்வி ஷாவால் அவர் சொன்ன தொனியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை தாக்க முயன்றார். மேலும் மும்பை வீரர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கள நடுவர் பிரித்வி ஷாவை தடுத்து அனுப்பிவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
- ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்க 115 ரன்கள் எடுத்திருந்தது.
- 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தது.
மகளிர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சிறப்பாக பந்து வீசினர். முதல் மூன்று விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.
ஆனால் 4ஆவது வீராங்கனையாக களம் இறங்கிய பெத் மூனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 பந்தில் 109 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வீராங்கனை அலனா கிங் 49 பந்தில் 51 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்துவிட்டது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. சித்ரா அமினை (35) தவி மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சானா (11), நஷ்ரா சாந்து (11), ரமீன் ஷமிம் (20) இரட்டை இலக்க ரன்கள் அடிக்க 36.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் 3 விக்கெட்டும், மேகம் ஸ்கட் மற்றும் சுதர்லேண்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது.
- தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர்.
- ஓமர்சாய், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியால் 221 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஓமர்சார், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 48.5 ஓவரில் ஆல்அவுட் ஆனது.
வங்கதேச அணியின் முதல் மூன்று வீரர்கள் சைஃப் ஹசன் (26), தன்சித் ஹசன் (10), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர். இதனால் வங்கதேச அணி 221 ரன்கள் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஸ்ட்ரோக் பிளேயர் என்பதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் அடங்கும். கடினமான 3ஆவது இடத்தில் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் காண்பிக்கவில்லை. இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியன் டென் டோஸ்கேட், 3ஆவது இடத்திற்கு போதுமான பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள் என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சன் பற்றி ரியன் டென் டோஸ்கேட் கூறியதாவது:-
சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஆதரவாக இருக்கிறார். கோச்சிங் ஸ்டாஃப் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். உறுதியளித்த அவருடைய திறமையான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என நாங்கள் உணர்கிறோம்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வாய்ப்பை பெறலாம். முதல் மூன்று அல்லது நான்கு இடத்தில் விளையாட மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். சுப்மன் கில் தற்போது 4ஆவது இடத்தில் விளையாடி வருகிறார். ஆகவே, சாய் சுதர்சன் இதை அறிந்திருப்பார்.
அந்த மாதிரியான போட்டியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் ஒரு தொழிலாகத் தொடரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்ன மாதிரி, அவர் வெளியே சென்று நாம் நினைக்கும் அளவுக்கு ரன்கள் எடுக்க வேண்டும்.
ஒரு இடத்திற்காக போராடுகிறீர்கள் என்பதை அவரால் மறைக்க முடியாது. உங்களுக்குத் தெரியும், கருண் நாயர் இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த இடத்திற்கு நிறைய நல்ல வீரர்கள் போராடுகிறார்கள். எனவே சாய் சுதர்சன் தன்னை நம்புவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து 3ஆவது இடம் அவருக்கு வழங்கியுள்ளோம்.
இவ்வாறு ரியன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.






