என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • வங்கதேச அணி 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • ஆஸ்திரேலிய அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    நேற்றுடன் 16 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் தலா 7 புள்ளிகள் பெற்றுள்ளன. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளியுடனும் (3 வெற்றி,1 தோல்வி), இந்தியா 4 புள்ளியுடனும் (2 வெற்றி, 2 தோல்வி) உள்ளன. நியூசிலாந்து (3 புள்ளி), வங்காளதேசம், இலங்கை (தலா 2 புள்ளி), பாகிஸ்தான் (1 புள்ளி) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    இந்த போட்டி தொடரின் 17-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அந்த அணி தொடக்க போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கையுடன் மோதிய 2-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது போட்டியில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இங்கிலாந்து (4 விக்கெட்), நியூசிலாந்து (100 ரன்), தென்ஆப்பிரிக்கா (3 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதி இருந்த 4 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
    • முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் விலகியுள்ளார்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

    இந்திய அணியுடன் மோதும் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 133 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொழும்புவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் வெற்றி பெற 113 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணி 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    • ஜெய்ஸ்வால் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.
    • குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதால் தரவரிசையில் முன்னேற்றம்.

    கிரிக்கெட் தரவரிசைக்கான அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெல்லி போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், பேட்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் முன்னேனியுள்ளார்.

    23 வயதான ஜெய்ஸ்வால், 7ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 689 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    ஒருநாள் போட்க்கான பேட்டர்கள் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    • ருதுராஜ் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜலஜ் சக்சேனா 49 ரன்னில் அவுட் ஆனார்.

    இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. 'எலைட்' பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இதேபோல் 'பிளேட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும்.

    இந்நிலையில் கேரளா- மராட்டியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய மகராஷ்டிரா அணி 1 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளையும் 18 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ருதுராஜ் மற்றும் ஜலஜ் சக்சேனா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 15-வது முதல் தர அரை சதம் ஆகும்.

    இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜலஜ் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ருதுராஜ் 91 ரன்னில் வெளியேறினார்.

    மழை காரணமாக ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மகாராஷ்டிரா அணி 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. 

    • கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு 272 ரன்கள் இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணி 183 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் 12-ந் தேதி தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    109 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன்- மார்க்ரம் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 3 ரன்னிலும் அடுத்த வந்த முல்டர் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த டோனி டி சோர்ஸி- ரிக்கல்டனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஆனால் இவர்களது நிதானமான ஆட்டம் கைகொடுக்கவில்லை. சோர்ஸி 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    விக்கெட்டுகள் சரிந்த நிலையில் களமிறங்கிய பிரெவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 54 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரிக்கல்டனும் 45 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 60.5 ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி, அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நோமன் அலி தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

    • ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.

    அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 3-0 கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

    இதில் முதலில் நடந்த டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரான் 95 ரன்களும் முகமது நபி 62 ரன்களும் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் சைப் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் வங்கதேசம் அணி 27.1 ஓவரில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சைப் ஹசன் 43 ரன்கள் எடுத்தார். மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்கதேசத்துக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

    • இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
    • இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

    உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது.

    8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    அதன் அடிப்படையில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளனர். அடுத்த 4 இடங்களில் நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் உள்ளனர்.

    முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் 4 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை.
    • நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    இந்த இரு தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியில் சீனியர் வீரர்கள் ரோகித், விராட் கோலி மட்டுமே இடம்பெற்றனர். மற்ற சீனியர் வீரர்களான ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இந்த அணி இடம் பிடிக்கவில்லை.

    2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஷமி, அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்டார். 35 வயதான அவர் சிறிது காலமாக 3 வடிவிலான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. கடைசியாக ஜூன் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஷமி விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் முன்பே சொல்லிருக்கேன். தேர்வு என்பது என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சினை இருந்தால், நான் இங்கே பெங்கால் அணிக்காக விளையாடக்கூடாது.

    உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது.

    நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்பினேன். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    அவர்கள் (தேர்வுக்குழுக்கள்) என்னை எப்போது தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அப்போது நான் செல்ல தயாராக இருக்கிறேன்.

    என முகமது ஷமி கூறினார்.

    இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜூரல், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா ஆகியோர் புறப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×