என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பையில் தொடர் தோல்வி.. சாமி தரிசனம் செய்த இந்திய மகளிர் அணி- வைரலாகும் வீடியோ
- இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
- இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது.
8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன் அடிப்படையில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளனர். அடுத்த 4 இடங்களில் நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் உள்ளனர்.
முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் 4 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






