என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
- ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜூரல், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா ஆகியோர் புறப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த 15-வது லீக்கில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் இலங்கையின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு (53 ரன்), நிலக்ஷிகா சில்வா (55 ரன், 28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.
ஆனால் இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 16-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.
- உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை.
- என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன்.
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஷமி. இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார். நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சியில் விளையாட முடியும் என்றால். ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-
உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன். அவர்கள்தான என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாள் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால், பின்னர் ஏன் 50 ஓவர் போட்டியில் விளையாட முடியாது?. நான் உடற்தகுதியாக இல்லை என்றால், என்சிஏ-வில் இருந்திருப்பேன். ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது.
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
- சாய் சுதர்சன் எல்லைக் கோட்டின் அருகே தரையில் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
- கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 இன்னிங்சில் 759 ரன்களைக் குவித்தார்.
புதுடெல்லி:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இதற்கிடையே, டெல்லி டெஸ்ட்டின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது சாய் சுதர்சன் தனது பயிற்சி உடையில் எல்லைக் கோட்டிற்கு அருகே தரையில் அமர்ந்து மைதானத்தில் பந்து பொறுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சாய் சுதர்சன் பவுண்டரி லைனில் அமர்ந்திருந்தபோது ரசிகர் ஒருவர், குஜராத் டைட்டன்சை விட்டுவிட்டு சி.எஸ்.கே. அணிக்கு வாங்க என உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு இதே கோரிக்கையை விடுதது வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைக் குவித்து 'மிஸ்டர் கன்சிஸ்டன்ட்' என பெயர் பெற்றவர் சாய் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த வீரர் உள்ளூர் அணியான சிஎஸ்கேவில் விளையாட வேண்டும் என்பதே சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
109 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி அசத்தியுள்ளார்.
- சபீக் 41 ரன்னிலும் பாபர் அசாம் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
லாகூர்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக சபீக்- இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மசூத் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சபீக் - பாபர் அசாம் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சபீக் 41 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் பாபர் அசாம் 42 ரன்னில் வெளியேறினார்.
இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சவுத் ஷகீல் பொறுப்புடன் விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம்.
- இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு அணியின் கேப்டன் சுப்மன்கில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம். எது சிறந்த முடிவாக இருக்குமோ அதை எடுக்க முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கவுரவம். நான் மெதுவாக இந்தக் கவுரவத்திற்குப் பழகி வருகிறேன்.
நாங்கள் முதல் இன்னிங்சில் சுமார் 300 ரன்கள் (270 ரன்கள்) முன்னிலையில் இருந்தோம். அப்போது நாங்கள் யோசித்தோம். ஒருவேளை நாங்கள் மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 500 ரன்கள் எடுத்தாலும், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தால், அது எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமையக்கூடும். அதனால், அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தோம். அதுதான் அந்த முடிவின் பின்னணியில் இருந்த சிந்தனை.
நான் பேட்டிங் செய்யக் களத்திற்குச் செல்லும்போது, நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திக்கிறேன். மூன்று, நான்கு வயதிலிருந்தே நான் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால், களத்திற்குள் சென்றால், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்.
என்று கில் கூறினார்.
- உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
- ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித், விராட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் இப்போதைக்கு எது முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன்.
என கம்பீர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
- உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த 2 அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள் என்றும் அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள் என்றும் ஹர்ஷித் ராணாவின் கூறியுள்ளார்.
உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள். வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள். நான் அதைத் தாங்கிக் கொள்வேன். அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள்.
இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா சொல்றேன். உங்க யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது பையனை குறிவைக்கிறீங்கன்னு சொல்றது ரொம்ப நியாயம் இல்ல. ஏன்னா, அவங்க அப்பா முன்னாள் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, வெளிநாட்டுல பிறந்த இந்தியரோ இல்ல.
இதுவரைக்கும் அவர் எந்த கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், அவரு தனியா விளையாடியிருக்காரு, தொடர்ந்து தனியா விளையாடுவாங்க. நீங்க யாரையாவது தனியா குறிவைச்சீங்கன்னா, அது நியாயமில்லை.
என கம்பீர் கூறினார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
- பாகிஸ்தான் அணி 8-வது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2025 அக்டோபரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடர் 2025- 2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படும். அதன்படி ஆஸ்திரேலியா 100 சதவீததுடன் முதல் இடத்திலும் இலங்கை அணி 66.67 சதவீததுடன் 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 61.90 சதவீததுடன் 3-வது இடத்தில் உள்ளது.
4 முதல் 9 இடங்கள் முறையே இங்கிலாந்து (43.33), வங்கதேசம் (16.67), வெஸ்ட் இண்டீஸ் (0.00), நியூசிலாந்து (0.00), பாகிஸ்தான் (0.00), தென் ஆப்பிரிக்கா (0.00) ஆகிய அணிகள் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கு 12 புள்ளிகள், சமனுக்கு 4 புள்ளிகள், டையுக்கு 6 புள்ளிகள்.
இதில் புள்ளிகள் கழிக்கும் விதிமுறையும் உள்ளது. அதன்படி மெதுவான ஓவர் வீதத்திற்காக 2 புள்ளிகள் கழிக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்
- பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.
லாகூர்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி கடைசி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் (20 ரன்), வியான் முல்டர் (17 ரன்) சீக்கிரம் வீழ்ந்தாலும் ரையான் ரிக்கெல்டனும், டோனி டி ஜோர்ஜியும் அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் வலுவாக இருந்த தென்ஆப்பிரிக்கா கடைசி ஒரு மணி நேரத்தில் சறுக்கியது.
ரிக்கெல்டன் 71 ரன்னிலும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 8 ரன்னிலும், டிவால்ட் பிரேவிஸ் ரன் ஏதுமின்றியும், கைல் வெரைன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்கா 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. டோனி ஜி ஜோர்ஜி (81 ரன்), முத்துசாமி (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முத்துசாமி 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோர்ஜி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.
- 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது.
இந்தியா 'பாலோ-ஆன்' வழங்கியதால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் (87 ரன்), ஷாய் ஹோப் (66 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கேம்ப்பெல் சிறிது நேரத்தில் தனது 'கன்னி' சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜாவின் பந்தில் மெகா சிக்சரோடு மூன்று இலக்கத்தை தொட்டார். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார்.
அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்த போது, கேம்ப்பெல் (115 ரன், 199 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் ரோஸ்டன் சேஸ் இணைந்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3-வது சதத்தை எட்டினார். டெஸ்டில் 8 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ஆனால் செஞ்சுரிக்கு பிறகு நிலைக்கவில்லை. முகமது சிராஜ் வீசிய பந்தை ஷாய் ஹோப் (103 ரன், 214 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது பங்குக்கு 40 ரன்கள் (72 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 12 ரன்னில் வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 311 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 10-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்சும், ஜெய்டன் சீல்சும் கைகோர்த்து இந்திய பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டினர். 22 ஓவர்கள் சமாளித்த இவர்கள் தங்களது முன்னிலை ஸ்கோரை 100-க்கு மேல் தாண்ட வைத்து அசத்தினர். தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கியடித்து சீல்ஸ் (32 ரன், 67 பந்து) கேட்ச் ஆனார்.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 118.5 ஓவர்களில் 390 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் 79 ரன்கள் திரட்டினர். கிரீவ்ஸ் 50 ரன்களுடன் (85 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (8 ரன்) வாரிகனின் சுழலில் சிக்கினார்.
இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (25 ரன், நாட் அவுட்), சாய்சுதர்சனும் (30 ரன், நாட் அவுட்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்தது.
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் 39 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 -வது டெஸ்டின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் இந்த தொடரின் தொடர் நாயகனாக ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.






