என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. 209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொர்ந்து, திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 80 ரன்களை குவித்து அவுட்டானார்.

    18 ஓவர் முடிவில், ரங்கு சிங்- அசார் பட்டேல் ஜோடி களத்தில் இருந்தது. இதில், ரங்கு சிங் 21 ரன்களும், அசார் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். ரவி பிஷ்னோய் ரன் அவுட் ஆனார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இங்லிஸ் 110 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • பந்துவீச்சில் அர்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். இவர் தவிர ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று உள்ளனர்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்குப்பின் வழக்கமான நடைமுறையின்படி பேட்டியளித்தார். மற்ற வீரர்கள் பேட்டியளிக்கவில்லை.

    ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்காத வீரர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். முகமது சமி தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசம் திரும்பியுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா சென்றடைந்த அவரிடம், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த முகமது சமி, "நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம்" என்றார்.

    மேலும், அவருடைய சொந்த கிராமத்தில் மைதானம் கட்ட உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு "எனது கிராமத்தில் மைதானம் கட்ட நடவடிக்கை எடுத்த உ.பி. அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாம் திறமையான ஏராளமான இளைஞர்கள் பெற்றுள்ளோம். நம்முடைய பகுதியில் சிறந்த மைதானம், அகாடமி உருவாவது, முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டை பற்றி அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசிய முகமது சமி, 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணியில் சேர்க்கப்பட்டதைவிட, புறக்கணிக்கப்பட்ட சம்பவம்தான் அதிகம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறாத நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும். சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம்.

    கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இதுகுறித்து விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
    • 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.

    இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.

    ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.

    நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.

    பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.

    அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார்.

    மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் சீயோன்-ஆல்வின் கல்வி குழுமம் சார்பில் 2-வது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள சீயோன் பள்ளியில் நடைபெற்றது. இதில் 534 பேர் பங்கேற்றனர். அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் 6 வீரர்கள் 7 புள்ளிகளுடன் இருந்தனர். டை பிரேக்கர் முறையில் தமிழக வீரர் ஆயுஷ் ரவிக்குமார் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    அவருக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. கோகுல் கிருஷ்ணா, ராமகிருஷ்ணன், ஹரிகணேஷ், யஷ்வந்த், ஆதித்யா ஆகியோர் 2 முதல் 6-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    • டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.

    நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.

    டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.

    அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.

    தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.

    உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.

    விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.

    • ஐ.பி.எல். 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • வருகிற 26-ந்தேதிக்குள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்பே. அதையெல்லாம் கடந்து செல்வதுதான் விளையாட்டின் இயல்பு. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. தோல்வியில் இருந்து இன்னும் வெளியே வர முடியாத நிலையில், கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ந்தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்ற விவரத்தை நவம்பர் 26-ந்தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அணிகள் தங்களுடைய வீரர்களை பரஸ்பர மாற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த வகையில், அதிகாரப்பூர்வமாக லக்னோ சூப்பர் செயின்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்கிறது. அதற்குப் பதிலாக தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறுகிறது.

    டெல்லி அணி சர்பராஸ் கான், மணிஷ் பாண்டே ஆகியோரை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸை வெளியிட விரும்புகிறது. பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த பெரும் தொகையை தக்கவைத்துக் கொண்டு ஏலத்தில் வீரர்களை வாங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 2023 சீசனில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இதைவிட மிகப்பெரிய செய்தி ஒன்று இணைய தளத்தில் உலா வருகிறது. அது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கிறார் என்பதுதான்.

    ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட்டபோது, புதிதாக ஏலம் விடப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்ட்யா குஜராத் லயன்ஸ் அணிக்கு சென்றார். ஹர்திக் பாணட்யா தலைமையில் குஜராத் அணி 2-வது இடம பிடித்தது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் அணியில் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக ஜாஃப்ரா ஆர்சர் அல்லது ரோகித் சர்மாவை கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்தி செய்தியாக கூட இருக்கலாம்.

    தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுமே தங்களுடைய தலைசிறந்த கேப்டன்களை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    வருகிற 26-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்களை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. தக்கவைத்துள்ளது என்பது தெரியவரும்.

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
    • தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க டிராவிட் விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இந்தியாவில நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றால், ராகுல் டிராவிட் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    தோல்வியடைந்ததால் எதிர்காலம் குறித்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராகலாம் எனத் தெரிகிறது.

    ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை. குறிப்பாக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் விவிஎஸ் லட்சுமண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் அணியுடன் பயணம் செய்ய முடியாத நிலையில், விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.

    ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை (2023) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய போதிலும், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • 2021-ல் இருந்து இந்திய டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

    ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    ஏறக்குறைய இந்தியாவின் "பி" அணி என்று நினைத்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லையா? அல்லது தோல்வியின் விரக்தியில் கலந்து கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், முதன்முறையாக இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது ஏமாற்றதை அளித்திருக்கும்.

    ×