என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
    • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

    இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

    தாஷ்கண்ட்:

    உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்றார்.

    தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போட்டியில் அதனை முறியடித்து பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அவர்களுக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் நான்காம் இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • ஐதராபாத் இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
    • சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    17 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கியது. இன்றுடன் நிறைவுபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 2024 ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஐதராபாத் இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    இந்த நிலையில், 2024 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எஸ்.எம். டோனியின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணிக்காக பேட் கம்மின்ஸ் வென்றார். அந்த வகையில், இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் எம்.எஸ். டோனியின் சாதனையை பேட் கம்மின்ஸ் சமன் செய்வார். 

    • 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    • சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
    • குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார்.

    சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் உள்ளர். அதனால் எனது கணிப்பு கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும்.

    இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    • ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டியை ஒட்டி கொல்கத்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோ ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    வீடியோவில் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், "அன்பார்ந்த பேட், இன்று. உனக்காக சிறு தகவலை தெரிவிப்பது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில், இந்த சீசனில் ஆரஞ்சு ஆர்மியை நீங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளீர்கள் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இந்த சீசனில் நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்."

    "ஒரே எதிரணியை வேறொரு களத்தில் நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், இன்று நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நிறங்கள் உங்களுக்கு மிகவும் பரீட்சயமான பர்பில் மற்றும் கோல்டு ஆகும். பரபரப்பான இறுதிப்போட்டியில், சிறப்பான அணி வெல்லட்டும், இதன் மூலம் நான் நமது அணியை குறிப்பிடுகிறேன்," என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "சிறிய தகவலுக்கு நன்றி. நீங்கள் அருமையாக இருந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் swag-க்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். ஆனால், இந்த மைதானத்தில் எங்களின் சிறப்பான வெற்றியை பெற போகிறோம். கே.கே.ஆர். வீரர்களுக்கு எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும்."

    "ஞாயிற்றுக் கிழமை வாருங்கள், இந்த சீசனில் நீங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியதாக தெரிவித்தீர்கள், ஆனால் ஆரஞ்சு ஆர்மி தனது சிறப்பான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த சேமித்து வைத்திருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் யீயை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-16 என முதல் செட்டை வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வாங் யீ அடுத்த இரு சுற்றுகளை 21-5, 21-16 என கைப்பற்றிய சாம்பியன் பட்டம் வென்றார்.

    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

    • கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
    • இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கவுதம் கம்பிர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    விவிஎஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

     

    இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடநதபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஐபி எல் போட்டிகளில் பிசியாக உள்ள கவுதம் கம்பிர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

     

    அதாவது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு தான் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளித்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் நிபந்தனை விதித்துள்ளார். இந்த கண்டிஷனை பிசிசிஐ ஏற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் (மே 27) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×