என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
    • போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்றுள்ளார்.

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

    113 ரன்களுக்கு ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் போப்பையை தன் வசமாக்கியது.

    இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடி ) வென்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.73 கோடி பரிசை வென்றுள்ளார்.

    கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.

    முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்" என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

    போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.

    இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி பந்தயம் கட்டி, டிரேக் இப்போது சுமார் ரூ.3.73 கோடியை பெற்றுள்ளார். இதன் மூலம், டிரேக் சுமார் 1.7 கோடி லாபத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

    அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.

    அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.

    இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின.
    • மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் மகளிர் ஐபிஎல் 2024 மற்றும் ஆடவர் ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    அதேபோல ஆடவர் ஐபிஎல் தொடரில் இந்திய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் இடம்பெற்றிருந்தார். இரு தொடர்களிலும் இந்திய கேப்டன்களே கோப்பை வென்று அசத்தினர்.

    மேலும் இரு தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இரு ஆஸ்திரேலிய கேப்டன்கள் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அப்படி முதலில் ஆடிய இரு அணிகளும் 10.3 ஓவரில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய கேப்டன்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு தொடர்களிலும் 4 விஷயங்கள் ஒற்றுமையாக உள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்தது.

    டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஒபேத் மெக்காய், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

    அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதிபோட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் சென்னை - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 125 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ரன்களாக இருந்தது. அதனை தற்போது ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.

    இறுதிப்போட்டியில் குறைந்த பட்ச ரன்கள் எடுத்த அணிகள் விவரம்:-

    113 ஐதராபாத் vs கொல்கத்தா - சென்னை 2024 *

    125/9 சென்னை vs மும்பை - கொல்கத்தா 2013

    128/6 புனே vs மும்பை - ஐதராபாத் 2017

    129/8 மும்பை vs புனே - ஹைதராபாத் 2017

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். தொடக்கமே ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    அபிஷேக் 2 ரன்னிலும் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த திருப்பாதி முதலில் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சொதப்பிய அவர் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும் மார்க்ரம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த ஷபாஷ் அகமது 8 ரன்னிலும் அப்தும் சமாத் 4 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த கிளாசனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
    • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

    இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

    தாஷ்கண்ட்:

    உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்றார்.

    தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×