என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும்.
    • அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை ஜியான்ஜியானை (பிரான்ஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஊதித்தள்ளினார். பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். அவர் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) நாளை மோத உள்ளார்.

    இதே போல் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சச்சியா விக்கெரியை (அமெரிக்கா) வெளியேற்றினார். தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலியா அவ்டீவாவை (ரஷியா) விரட்டினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), லேலா பெர்னாண்டஸ் (கனடா), சம்சோனோவா (ரஷியா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

    • சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார்.
    • லக்‌ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.

    சிங்கப்பூர்:

    மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.

    • ‘களிமண் தரையின் ராஜா’ என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர்.
    • 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடாலை (ஸ்பெயின்) சந்தித்தார். காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நடால் தற்போது உலக தரவரிசையில் 275-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள அவருக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு ஆட்டமாக இது அமைந்தது.

    'களிமண் தரையின் ராஜா' என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர். ஆனால் இந்த முறை அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லை. ஓரளவு ஈடுகொடுத்து ஆடினாலும் நேர் செட் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 3 மணி 5 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    நடாலின் ஆட்டத்தை நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோரில் நேரில் கண்டுகளித்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் எபாங்சை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் அவர் உள்ளூர் நாயகன் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எதிர்கொள்கிறார். இதே போல் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (9-7), 6-4, 6-1 என்ற செட்டில் மார்டோன் புசோவிக்சை (ஹங்கேரி) சாய்த்தார்.

    இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான 95-ம் நிலை வீரரான சுமித் நாகலின் சவால் முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. அவரை கரென் கச்சனோவ் (ரஷியா) 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    • இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
    • பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகல்.

    டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

    ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகியதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும், ஜாஸ் பட்லர் - லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • 3-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வான் டெர் டுசன் அதிகபட்சமாக 31 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்ட களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 28 பந்தில் 44 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
    • ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.

    அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.

    அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஆஸ்திரேலிய அணிக்காக பிரான்சிஸ் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
    • டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால், இந்த முறை முழுமையாக விளையாட முடிவு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தனது துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். பிரான்சிஸ் உரிமையாளர்கள் (ஐபிஎல் அணி உரிமையாளர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இவரை ஏலத்தில் எடுக்க தயாராக இருந்தனர். இருந்தபோதிலும் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் எனக் கூறி ஐபிஎல் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.

    இவர் 2014 மற்றும் 2015-ல் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதையொட்டி ஐபிஎல் தொடரில் முழுவதுமான இடம் பெறுவேன் என அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார்க்கை ஏலம் எடுத்தது. அப்போது இவருக்கு இவ்வளவு தொகையா? என விமர்சனம் எழுந்தது.

    விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமான குவாலிபைய-1 மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இதனால் அடுத்த வருடமும் விளைாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பும்போது பிரான்சிஸ் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் அதற்காக ஒருநாள் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன். இதற்காக என்னுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கவும், மனைவியுடன் நேரத்தை செலழிக்கவும் எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டேன். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் மட்டுமே கவனத்தில் இருந்தது. பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்து வந்தேன்.

    நான் தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தை விட முடிவு கட்டத்தில் உள்ளேன். ஒரு விடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நீண்ட காலம் உள்ளது. இது எனக்கு தொடர்கிறதோ... இல்லையோ... இது அன்னும் அதிகப்படியான பிரான்சிஸ் கிரக்கெட்டிற்கு வழி வகுக்கும்.

    அடுத்த வருடம் சரியான போட்டி அட்டவணை எனக்குத் தெரியாது. இருந்த போதிலும் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடமும் கொல்கத்தா அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    • எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

    பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

    • இந்தியா முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.
    • மூன்று போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

    20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக பயற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்ததால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்த வீரர்கள் உள்ளிட்டோர் முதற்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

    அதன்படி நேற்று முன்தினம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டனர். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைந்தனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.

    இந்திய அணி விளையாடும் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.

    • ஹர்ஷித் ராணா 11 இன்னிங்சில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைன் இணைந்தார். இது கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.

    மிகப்பெரிய அனுபவ வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் இருந்த போதிலும், இவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. இதனால் 24 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது வேஸ்ட் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    ஆனால் ஸ்டார்க் பலவீனம் ஹர்ஷித் ராணா, வைபஸ் ஆரோரோ ஆகியோரால் மறைக்கப்பட்டது. இரு இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினர். ஸ்விங், ஸ்லோவர் ஒன், ஸ்லோ பவுன்சர் என அசத்தினர். பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டியில் ஸ்டார்க் அசத்திய வேறுகதை.

    இறுதிப் போட்டியில் வைபவ் ஆரோரா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது சிறந்த அவுட் ஸ்விங் பந்தாகும் (இடது கை பேட்ஸ்மேனுக்கு). மேலும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தார்கள்.

    கொல்கத்தா அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, அந்த அணியின் பந்து வீச்சாளர் பரத் அருண் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.

    இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இவரது காலத்தில்தான் இந்தியா வேகபந்து வீச்சில் முக்கியத்துவம் பிடித்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி சாதனைகள் படைத்தது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஜொலித்தனர். ஜொலித்து வருகின்றனர்.

    அதேபோல் கொல்கத்தா அணியிலும் இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்த முக்கிய காரணமக இருந்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மறைமக கதாநாயகன் என்று இவரை அழைக்கலாம்.

    ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 11 போட்டிகளில் பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    சுனில் நரைன் 17 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். பஞ்பாப் வீரர் ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.

    • சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
    • 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.

    அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

    • 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
    • போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்றுள்ளார்.

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

    113 ரன்களுக்கு ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் போப்பையை தன் வசமாக்கியது.

    இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடி ) வென்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.73 கோடி பரிசை வென்றுள்ளார்.

    கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.

    முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்" என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

    போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.

    இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி பந்தயம் கட்டி, டிரேக் இப்போது சுமார் ரூ.3.73 கோடியை பெற்றுள்ளார். இதன் மூலம், டிரேக் சுமார் 1.7 கோடி லாபத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×