என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்து பெண்கள் அணி இந்தியாவில் பயணம்செய்து ஒருநாள் தொடரில் விளையாடியது.
    • இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.

    துபாய்:

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

    பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடம் முன்னேறி 9-வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்திசர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேணுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32-வது இடத்திற்கு வந்துள்ளார்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4-வது இடத்தில் உள்ளார்.

    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

    இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது.

    இந்நிலையில் இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது.

    இந்நிலையில், இமானே கெலிஃப்-க்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் தங்க பதக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இமானே கெலிஃப் வெள்ளை நிற சட்டையுடன் ஓட்டு போடும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்பஜன் சிங், "இது அநியாயம், இவருக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கத்தை ஒலிம்பிக் அமைப்பு திரும்பப்பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
    • பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

    இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்-ல் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விளையாடுவது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா விளையாடவில்லையெனில் அவருக்கு பதிலாக துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    அதில், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விளையாடுவது முக்கியம். காயம்பட்டால் அது வேறு, ஆனால் அவர் வரவே இல்லை என்றால், துணை கேப்டன் தலைமையில் அணி களமிறங்க வேண்டும்.

    • கோலி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் விராட் கோலியின் பிறந்தநாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "சிறப்பான Comeback நம்முடைய Setback-ல் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் Comeback-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.

    கடந்த காலத்தில் அதை நீங்கள் செய்தீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அதை செய்து காண்பிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

    • நியூசிலாந்து வீரர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
    • இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது.

    நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

    சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 -0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.

    அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

    இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறினார். 

    • டோனி சென்னைக்கு அணிக்கு முக்கியமானவர்.
    • களத்திற்கு வெளியே இருந்தாலும் அவரால் அந்த தலைமையை வழிநடத்த முடியும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

    அந்தவகையில் சென்னை அணியும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.

    மேற்கொண்டு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து உருவாக்கி வரும் பிடிப்பு பற்றி தனது அபிமானத்தைப் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இரண்டு சீசன்களுக்கு முன்பு அவர் தனது மோசமான சீசனைக் கொண்டிருந்தார், ஆனால் கடந்த ஆண்டு மீண்டும், பழைய எம்எஸ் டோனி போல் சில ஆட்டங்களில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

    இப்போதும் அவர் அதே ஃபார்மில் தன் இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் சிஎஸ்கே அணி அவரை சீசன் முழுவதும் பெறாமல் போகலாம். அவரை விளையாட்டிற்கு வெளியே விட்டுவிட்டு, தேவைப்படும் போட்டிகளில் மட்டுமே அவரை பயன்படுத்தலாம் என்றும் நினைக்கலாம்.

    அவர் களத்தில் இறங்கி விளையாடுகிறாரோ அல்லது வெளியே ஓரமாக அமர்ந்திருக்கிறார் என்பது பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. ஆனாலும் அவர் சென்னைக்கு அணிக்கு முக்கியமானவர். களத்திற்கு வெளியே இருந்தாலும் அவரால் அந்த தலைமையை வழிநடத்த முடியும். 10, 12, 14 வருடம் தொடர்ச்சியாக இவ்வளவு உயர் மட்டத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளக்கூடியவர்களே சிறந்த வீரர்கள். அப்படி ஒரு வீரர் தான் எம்எஸ் டோனி.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    • இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

    இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது.

    இந்நிலையில் இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது.

    ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
    • கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.

    சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 'ஒயிட்வாஷ்' ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் 37 வயதான கேப்டன் ரோகித் சர்மா (6 இன்னிங்சில் 91 ரன்), விராட் கோலி (6 இன்னிங்சில் 93 ரன்) ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடர் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

    இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போதே யோசிக்க தொடங்கி விட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா சோபிக்காவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

    அதன் பிறகு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஏற்கனவே அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டார். ரோகித் சர்மாவுக்கு தற்போது வயதாகி விட்டது. அவர் இளம் வீரர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு விஷயத்தில் ரோகித் சர்மாவை பாராட்டியாக வேண்டும். நியூசிலாந்து தொடரை இழந்ததும் தொடர் முழுவதும் தான் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் சரியாக செயல்படவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். நம் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இது ஒரு மனிதனுக்கு நல்ல தகுதியாகும். தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதன் மூலம் அது அவருக்கு அதில் இருந்து மீள்வதற்கு உதவிடும் என்று கருதுகிறேன்' என்றார்.

    மேலும் ஸ்ரீகாந்த் கூறுகையில், 'விராட் கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் நன்றாக ஆடுவார். அங்கு ரன் குவிப்பது அவரது பலங்களில் ஒன்று. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போதே கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது' என்றார்.

    • ஜெய் ஷா கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
    • பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன், ஜெய் ஷா கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் மாதம் ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா பொறுப்பேறுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது.

    இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் எதிரொலித்தன.

    இந்நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
    • சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தினார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

    இதில் 'பர்பிள்' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடம் வகிப்பவருமான ஜாங் கின்வென்(சீனா) 7-6 (7-4), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.

    2-வது ஆட்டத்தில் ஆடிய கின்வென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த ரைபகினா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், அரைஇறுதி சுற்றையும் உறுதி செய்தார்.

    • மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
    • கடந்த பிப்ரவரியில் இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.

    பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா (வயது 39) என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா (வயது 40) என்பவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதும் மைதானத்தில் சரிந்து விழுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    குரூஸ் மிஜா மீது தீப்பற்றுவது போன்ற காட்சியும் அதில் காணப்பட்டது. இதில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, முன்பே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், போட்டியும் கைவிடப்பட்டது.

    கையில் உலோக பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்துள்ளார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்க கூடும் என தகவல் கூறுகிறது. கடந்த பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா (வயது 30) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். இதேபோன்று, காங்கோவில் 25 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.



    ×