என் மலர்
கிரிக்கெட் (Cricket)

14 வருடம் தொடர்ச்சியாக.. டோனியை புகழ்ந்த ரிக்கி பாண்டிங்
- டோனி சென்னைக்கு அணிக்கு முக்கியமானவர்.
- களத்திற்கு வெளியே இருந்தாலும் அவரால் அந்த தலைமையை வழிநடத்த முடியும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
அந்தவகையில் சென்னை அணியும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.
மேற்கொண்டு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து உருவாக்கி வரும் பிடிப்பு பற்றி தனது அபிமானத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இரண்டு சீசன்களுக்கு முன்பு அவர் தனது மோசமான சீசனைக் கொண்டிருந்தார், ஆனால் கடந்த ஆண்டு மீண்டும், பழைய எம்எஸ் டோனி போல் சில ஆட்டங்களில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இப்போதும் அவர் அதே ஃபார்மில் தன் இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் சிஎஸ்கே அணி அவரை சீசன் முழுவதும் பெறாமல் போகலாம். அவரை விளையாட்டிற்கு வெளியே விட்டுவிட்டு, தேவைப்படும் போட்டிகளில் மட்டுமே அவரை பயன்படுத்தலாம் என்றும் நினைக்கலாம்.
அவர் களத்தில் இறங்கி விளையாடுகிறாரோ அல்லது வெளியே ஓரமாக அமர்ந்திருக்கிறார் என்பது பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. ஆனாலும் அவர் சென்னைக்கு அணிக்கு முக்கியமானவர். களத்திற்கு வெளியே இருந்தாலும் அவரால் அந்த தலைமையை வழிநடத்த முடியும். 10, 12, 14 வருடம் தொடர்ச்சியாக இவ்வளவு உயர் மட்டத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளக்கூடியவர்களே சிறந்த வீரர்கள். அப்படி ஒரு வீரர் தான் எம்எஸ் டோனி.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.






