என் மலர்
விளையாட்டு
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
- அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில் இருக்க வேண்டும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.
அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.
ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை பயமுறுத்த காத்திருப்பார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் சொதப்பதற்க்கு வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல.
அதிலும் குறிப்பாக பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற உலகத் தரமான பந்துபந்துவீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் செய்ய உள்ளனர். இதன் காரணமாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த விசயம் தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில், சரியான டெக்னிக்குடன் விளையாட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த தொடரிலும் தடுமாற அதிக வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு மைக்கல் வாகன் கூறினார்.
- மும்பை இந்தியன்ஸ் ILT20-ன் சமீபத்திய சீசனுக்காக அவரை ஒப்பந்தம் செய்தது.
- உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
965 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதே போல உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள்.
இந்நிலையில் முதல் முறையாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த தாமஸ் டிராகா இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார். 24 வயதான அவர், பல நாடுகளில் லீக் கிரிக்கெட் அனுபவம் பெற்றவர். அவர் ஏலப் பதிவில் 345-வது இடத்தில் உள்ளார் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் இத்தாலியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
டிராகா 2024 குளோபல் டி20 கனடாவில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காக விளையாடினார், அங்கு அவர் ஆறு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். அவரது திறமையை உணர்ந்த மும்பை இந்தியன்ஸ் ILT20-ன் சமீபத்திய சீசனுக்காக அவரை ஒப்பந்தம் செய்தது.
- 2008 முதல் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.
- சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரில் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் வர்ணனையின் போது பேசியது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
2008 முதல் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் நடைபெற்றது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார். அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தான் ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார்.
அதற்கு வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் "ஏன்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு வாசிம் அக்ரம், "எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை." என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
- 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.
- 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடக்க இருக்கின்றன.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடந்தது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடக்க இருக்கின்றன.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது இந்தியாவின் கனவாகும். அதனை நனவாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புவதாக கூறி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த விருப்ப கடிதத்தில் இடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி அளித்தால் இந்திய அரசு போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க என்னென்ன உதவிகளை அளிக்கும் என்று விவரங்களும் அதில் இடம் பெற்று இருக்கின்றன.
ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால திட்டத்தை சாத்தியமாக்கும் முயற்சியில் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து இருக்கும் இந்தியா அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், போட்டியை நடத்த தங்களிடம் உள்ள வசதிகளை விரிவாக எடுத்துரைக்க பேச்சுவார்த்தை நடத்தி அதில் அவர்களை திருப்தி அடைய செய்ய வேண்டியது முக்கியமானதாகும். அதைத் தொடர்ந்து போட்டியை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் எந்த நாட்டுக்கு போட்டியை நடத்தும் உரிமம் வழங்குவது என்பது உறுப்பு நாடுகள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் முடிவு செய்யப்படும். எனவே போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற சக நாடுகளின் ஆதரவை பெறுவதும் அவசியமானதாகும்.
இந்த போட்டியை நடத்த இந்தியா மட்டுமின்றி சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட பல வளமான நாடுகளும் வரிந்து கட்டுகின்றன. எனவே போட்டியை நடத்தும் உரிமம் பெறுவதில் கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேர்தலுக்கு பிறகு தான் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு எது என்பது தீர்மானிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை கைப்பற்றுவது என்பது எளிதான காரியமல்ல. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு அடித்தால் ஆமதாபாத் தான் போட்டிக்கான பிரதானமான நகரமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே இதுவரை ஒலிம்பிக் விளையாட்டு நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
- நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் 2024-25 போட்டியின் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன் அணிகள் மோதின. இந்த போட்டி ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள சாண்டியாகோ பெர்னாபியூவில் நடைபெற்றது.
பரபரப்பான இந்த போட்டியில் ஏசி மிலன் அணி 12-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி 23-வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
இதனையடுத்து 39-வது நிமிடத்திலும் 73-வது நிமிடத்திலும் மிலன் அணி கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் மாட்ரிட் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
- 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம். டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.
- ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கோகோ காப்- இகா ஸ்வியாடெக் மோதினர்.
- இதில் வெற்றி பெற்ற கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
ரியாத்:
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க 'இளம் புயல்' கோகோ காப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) தோற்கடித்தார். 2-வது வெற்றியை சுவைத்த கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வெளியேற்றி, அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தார்.
- ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
ஏலத்திற்கான இடமாக சவுதிஅரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களை பரிசீலனை செய்த இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதியில் சவுதியின் துறைமுக நகரான ஜெட்டாவை தேர்வு செய்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதி ஆகிய இரு நாட்கள் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து 91 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்திற்கு முன்பாக இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் போக 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது.
- பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.110.5 கோடி உள்ளது.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளன.
பஞ்சாப் அணி இரண்டு வீரர்களையும், ஆர்.சி.பி. அணி மூன்று வீரர்களையும், டெல்லி அணி நான்கு வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு வீரர்களையும் தக்க வைத்துள்ளது. வீரர்களை தக்க வைத்தது போக ஒவ்வொரு அணியிடமும் புதிய வீரர்களை வாங்குவதற்கு கணிசமான தொகை கையிருப்பு உள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து பிசிசிஐ சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்றாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால், யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.
இறுதியில், உபி யோதாஸ் அணியை 33-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் 3வது வெற்றி ஆகும்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.
இதில் கிரெஜ்சிகோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற உள்ளது.
- இதில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் திடீரென விலகினார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வரும் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டிக்கு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில், காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஜோகோவிச், நம்பர் 1 வீரரான சின்னரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






