என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPLMegaauction2025"

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
    • ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.

    ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

    • ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
    • 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

    இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம். டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    • அதிக பட்சமாக ரிஷப் பண்டை எல்.எஸ்.ஜி. அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • வைபவ் சூர்யவன்ஷி (13 வயது) ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.

    இதனை தொடர்ந்து ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. 2 நாட்களில் 182 வீரர்களுக்காக 639.15 கோடியை 10 அணி உரிமையாளர்கள் செலவிட்டுள்ளனர்.

    அதிக பட்சமாக ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி, எல்.எஸ்.ஜி.), ஷ்ரேயாஸ் அய்யர் (ரூ. 26.75 கோடி, பஞ்சாப்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கே.கே.ஆர்) ஆகிய மூவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார். ராஜஸ்தான் அணி அவரை ரூ 1.10 கோடிக்கு வாங்கியது.

    சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விலைக்கு யுஸ்வேந்திர சாஹல் ஏலம் போனார். ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

    ஏலத்தின் 2-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி தட்டி தூக்கியது. 

    • பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது.
    • இறுதியில் ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது ஏலதாரர் மல்லிகா சாகர் சில தவறுகளை செய்துள்ளார். இது அணி உரிமையாளர்களை சற்று வேதனையடைய செய்துள்ளது.

    அந்த வகையில் டெல்லி அணி ஏலத்தைக் கவனிக்காததால் உத்தரபிரதேச பேட்டர் ஸ்வஸ்திக் சிகாராவை ஆர்சிபிக்கு ஏலதாரர் விற்றார். உடனே டெல்லி நிர்வாகம் நாங்கள் துடுப்பை உயர்த்தினோம் என கூறினார். ஆனால் அதற்கு ஏற்கனவே ஆர்சிபி-க்கு விற்று விற்றதாக கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் டெல்லி அணி அதிருப்தி அடைந்தது.

    இதனை தொடர்ந்து ஜாஸ் பட்லரை ஏலத்தில் விற்கும் போதும் சில தவறுகளை செய்ததால் குஜராத் அணிக்கு ரூ. 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியில் ரூ.15.50 கோடிக்கு குஜராத் ஏலம் எடுத்தது. அதை ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்க விரும்புகிறீர்களா என லக்னோ அணியிடம் கேட்டார். உடனே லக்னோ மறுத்து விட்டது. இதனையடுத்து ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணிக்கு விற்றது.

    குஜராத் ரூ.15.50 கோடிக்கு கடைசியாக ஏலம் எடுத்தது. ஆனால் ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு விற்றது. இதனால் அந்த அணி 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஏலதாரர் மல்லிகா சாகர் மீது இது குறித்து எதிர்ப்புகளை அணி நிர்வாகிகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது.
    • இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. ஏலத்தின் முடிவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஏலம் போகவில்லை.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதன்பின் ஏலம் முடிந்த பிறகு கையில் இருக்கும் தொகையின் அடிப்படையில் எந்த வீரரையும் எடுக்கலாம். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நிமிடத்தில் அர்ஜூனை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவர் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

    அர்ஜூனை ஏலத்தில் எடுத்தது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் மீம்ஸ்களும் உலா வருகின்றனர். பலர் சச்சின் மகன் என்பதால் அவரை ஏலம் எடுத்ததாகவும் இவரை போன்றவர்களால் தான் பல திறமையுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவரையும் வாங்கி விடுவார்கள் என மற்ற அணி ரசிகர்கள் கூறுவதுண்டு. முக்கியமாக சிஎஸ்கே ரசிகர்கள் அதை வைத்து கலாய்ப்பதுண்டு. அந்த வகையில் ஏலம் முடிந்த பிறகும் ஒரு வீரரை வாங்க முடியும் என்றால் அது மும்பை அணியால் மட்டுமே முடியும் எனவும் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. 

    • ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர்.
    • கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதுபோக மிட்செல் மார்ஷ், மார்க்கிராம், டேவிட் மில்லர் போன்ற வீரர்களையும் எடுத்துள்ளது.

    இந்த அணியில் ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர். இதனால் கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே தெரிவித்துள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப் உள்ளார். மிட்செல் மார்ஷும் இருக்கிறார். இவர்கள் பந்து வீச்சில் எப்படி ஆதிக்கம் செலுத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பேட்டிங்கில் தொடக்க வீரர்களை களம் இறக்குவதில் லக்னோவிற்கு சவால் இருக்கும். மிடில் ஆர்டர்களில் பண்ட், பூரன், மார்க்கிராம், ஆயுஷ் படோனி உள்ளிட்டோர் உள்ளனர்.

    24 பேர் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-

    1. நிக்கோலஸ் பூரன் (வெளிநாட்டு வீரர்), 2. ரவி பிஷ்னோய், 3. மயங்க் யாதவ், 4. மொஹ்சின் கான், 5. ஆயுஷ் படோனி, 6. ரிஷப் பண்ட், 7. டேவிட் மில்லர் (வெளிநாட்டு வீரர்), 8. எய்டன் மார்க்கிராம் (வெளிநாட்டு வீரர்), 9. மிட்செல் மார்ஷ் (வெளிநாட்டு வீரர்), 10. ஆவேஷ் கான், 11. அப்துல் சமத், 12. ஆர்யன் ஜூயல், 13. ஆகாஷ் தீப், 14. ஹிம்மத் சிங், 15. எம். சித்தார்த், 16. திக்வேஷ் சிங், 17. ஷாபாஸ் அகமது, 18. ஆகாஷ் சிங், 19. ஷமர் ஜோசப் (வெளிநாட்டு வீரர்), 20. பிரின்ஸ் யாதவ், 21. யுவராஜ் சவுத்ரி, 22. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், 23. அர்ஷின் குல்கர்னி, 24. மேத்யூ பிரீட்ஸ்கே (வெளிநாட்டு வீரர்).

    ×