என் மலர்
விளையாட்டு
- இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
- 2026 தொடரில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.
ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். அதேவேளையில் பாகிஸ்தான் 2026-ல் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்காது. பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படுவதற்கு ஐசிசி பாகிஸ்தானுக்கு இழப்பீடு ஏதும் வழங்காது.
பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களில் போட்டிகள் அனைத்தும் நடைபெறும். இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.
அதேவேளையில் 2027-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பெண்கள் ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும்
- 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டார்.
- அவருக்கு பதிலாக இங்கிலாந்து முன்னாள் வீரரை நியமித்தது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி திண்டாடி வருகிறது. அதில் கடந்த 4 சீசனில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் கடந்த சீசனிலேயே திடீரென குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் மூலமாக ஹர்திக் பாண்ட்யா கொண்டு வரப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். இருந்தாலும் அந்த சீசனிலும் கடைசி இடத்தில் தான் மும்பை அணி நிறைவு செய்தது.
இதனால் அணியில் நிறைய மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்துள்ளது. அந்த வகையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சரை நீக்கிய மும்பை அணி, மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவை நியமித்தது.
இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்படுவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 43 வயதாகும் இங்கிலாந்து முன்னாள் வீரரும், ஃபீல்டிங் பயிற்சியாளருமான கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியுடன் பணியாற்றியவர் கார்ல் ஹாப்கின்சன். இதனால் அவரின் இணைப்பு மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
- முதலில் விளையாடிய டெல்லி அணி 146 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய படிதார் 29 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து மத்திய பிரதேசத்தின் தொடக்க வீரர் அர்பித் கவுட் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேனாபதி 7 ரன்னிலும் ஹர்ஷ் கவ்லி 30 ரன்னில் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ஹர்பிரீத் சிங் பாட்டியா- ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி படிதார் அரை சதம் விளாசினார்.
இறுதியில் 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மத்திய பிரதேசம் அணி இறுதிப் போட்டியில் மும்பையை வருகிற 15-ந் தேதி எதிர் கொள்கிறது.
- நான் எப்போதும் 2 திட்டங்களை தயாராக வைத்திருப்பேன் என கம்மின்ஸ் கூறினார்.
- இந்த தலைமுறை யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தைப் பார்த்து விளையாடும் என கில் கூறினார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் பவுன்சரால் மிரட்டுவோம் என கம்மின்ஸ் கூறினார். யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தை பார்த்து விளையாடுவோம் என கில் அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த போட்டியிலும் பவுன்சர்களை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. 2-வது போட்டியில் அது வேலை செய்தது. அது மட்டுமல்லாது எங்களிடம் வேறு திட்டமும் உள்ளது. நான் எப்போதும் 2 திட்டங்களை (ஏ மற்றும் பி) தயாராக வைத்திருப்பேன். ஒரு திட்டம் வேலையாகவில்லையெனில் மற்றொன்றை பயன்படுதுவேன்.
2வது போட்டியில் அந்தத் திட்டம் வேலை செய்ததால் இந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம். காபா மைதானத்தை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது. கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என கூறினார்.
இதனையடுத்து கில் கூறியதாவது:-
இளஞ்சிவப்பு நிற பந்து வித்தியாசமானது. கொஞ்சம் கடினமானது. நாங்கள் சிவப்பு நிற பந்தில் அதிகமாக விளையாடுகிறோம். ஆனால் இளஞ்சிவப்பு நிற பந்தை இரவு நேரத்தில் கை நிலை காரணமாக எதிர்கொள்வது கடினமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் எப்போதும் விளையாடும் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும். எனவே இங்கே நீங்கள் அசத்துவதற்கு மனதளவில் திடமாக இருப்பது அவசியம். சூழ்நிலையில் சவாலாக இருக்கும். ஆனால் 35 ஓவர்கள் கடந்த பின் 2வது புதிய பந்தை எதிர்கொண்டு பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். கடந்த போட்டியில் வென்று இருந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்கள்"
ஆனால் நாங்கள் கடந்த முறை இந்த மைதானத்தில் வென்றுள்ளோம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும் நாங்கள் வென்றுள்ளோம். எனவே இந்த தலைமுறை யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தைப் பார்த்து விளையாடும் தன்னம்பிக்கையைக் கொண்டது என்று கூறினார்.
- ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த அணியில் சாய் சுதர்சன் இடம் பெறவில்லை.
இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25-க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21-ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய போலண்ட்டுக்கு பதிலாக ஹசில்வுட் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சுந்தர் 2 விக்கெட்டும் 29 ரன்கள் விளாசினார். ஆனால் அஸ்வின் 2-வது டெஸ்ட்டில் பேட்டிங், பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு பீல்டிங்கில் தடுமாறுவதாலும் அவருக்கு பதில் சுந்தரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புள்ளது.
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட்டில் ஹர்சித் ரானா விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டார். மேலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தலா இரண்டு வெற்றி, 9 டிராவிற்குப் பிறகு கடைசி சுற்றான 14-ல் நேற்று மோதல்.
- 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. தமிழக வீரரான டி. குகேஷ் சீனாவின் டின் லிரேனை எதிர்கொண்டார். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தனர். 9 சுற்றுகள் டிராவில் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில்தான் 14-வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதால் இருவரும் வெற்றிக்காக போராடினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்றார்.
சுமார் 3 மணி நேர ஆட்டத்திற்குப் பிறகு லிரென் போட்டியை டிரா செய்ய முயற்சித்தார். ஆனால் டிரா செய்ய முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதனால் 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சீன வீரர் டிங் லிரென் வேண்டுமேன்றே தோற்றதாக சந்கேம் ஏற்படுவதாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் அன்ட்ரெய் பிளாடோவ் தெரிவிக்கையில் "கடைசி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. முக்கியமான சுற்றில் சீன வீரர் டிங் லிரெனின் செயல் மிகவும் சந்தேகத்திற்குரியவை. இது தொடர்பாக சர்வதேச செஸ் பெடரேசன் தனி விசாரணை நடத்த வேண்டும்.
டிங் லிரென் இருந்த நிலையை இழப்பது (சாம்பியன் பட்டத்தை) முதல் தர வீரருக்குக் கூட கடினம். இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய பரோடா அணி 158 ரன்கள் எடுத்தது.
- மும்பை தரப்பில் ரகானே 11 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
பெங்களூரு:
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பரோடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிய ரகானே அரைசதம் விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 46 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ரகானே 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 5 சிக்சர் என 98 ரன்கள் விளாசினார்.
இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் 2-வது அரைஇறுதியில் டெல்லி- மத்தியபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன.
- குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
- உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இதைத் தொடர்ந்து செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழக அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
- ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
- இரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனிடையே இந்த இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் 11 வீரர்கள் அடங்கிய பிளேயிங் 11 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா தரப்பில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதுதவிர அந் அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 அணியில்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
- வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அந்த பதிவில், "வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ் டி," என்று குறிப்பிட்டு இந்திய தேசிய கொடி, தீ மற்றும் கைத்தட்டுவதை குறிக்கும் எமோஜிக்களை இணைத்து இருந்தது.
உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டத்தை வெல்பவருக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடியே 75 லட்சம் ஆகும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிகளின் படி வீரர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 2 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 68 லட்சம் வழங்கப்படும்.
இதை தவிர்த்த மீதித் தொகை இரு வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். 2024 செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் குகேஷ் மூன்று (3வது, 11வது மற்றும் 14வது) போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 6 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 கோடியே 04 லட்சம் பெறுவார். இவரை எதிர்த்து விளையாடிய டிங் 1 மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 36 லட்சம் வென்றுள்ளார்.
அந்த வகையில் மீதமுள்ள 1.5 மில்லியன் டாலர்கள் குகேஷ் மற்றும் டிங் இடையே பகிர்ந்து அளிக்கப்படும். இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 கோடியே 34 லட்சமும், டிங் 1.15 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 9 கோடியே 66 லட்சமும் பெறுவார்கள் என்று தெரிகிறது.
- மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மஸ்கட்டில் நடந்துவருகிறது.
- இதில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மஸ்கட்:
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
இதில் ஏ பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நேற்று சந்தித்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது
இறுதியில், ஆட்ட நேர முடிவில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தீபிகா 4 கோலும், கனிகா சிவாச் 3 கோலும் அடித்தனர். இதனால் ஏ பிரிவில் இருந்து 3 வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது .






