என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், RCB கிரிக்கெட் அணியை வாங்குவதற்கு, உலகப்புகழ் பெற்ற Manchester United கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் ரூ.16,300 கோடி ($1.8 பில்லியன்) ஆஃபர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் IPL மற்றும் WPL என இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்ற RCBயின் மதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், தற்போதைய உரிமையாளரான Diageo-விடம் கிளேசர் குடும்பம் பிரமாண்ட தொகையை முன்மொழிந்துள்ளது.

    • அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.
    • வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 20 ஓவர் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.

    வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    • டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஅமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணியை நம்பி '300 ரன்கள் Loading' என தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் போட்ட பதிவு இணையத்தில் வைரலானது.

    ஆனால் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 161 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. சொல்லப்போனால் 2 அணிகள் சேர்த்து எடுத்த ரன்கள் கூட 300 என்ற இலக்கை தொடவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். 

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய அமெரிக்கா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.

    மும்பையில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.

    அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சூர்யகுமாருக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியாவில் டி20 போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் நேற்று முறியடித்தார்.

    இவர் மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    • ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா்.

    ஜப்பானின் நோபடோ மிஸாகி, இந்தியாவின் மேக்னா சஜ்நாா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இதில், ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார்.

    டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் விவரம்:

    லசித் மலிங்கா (இலங்கை)

    டிம் சௌதி (நியூசிலாந்து)

    பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

    ரொமாரியோ ஷெப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ்)

    • டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.

    அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • இதில் ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா திடீரென விலகினார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முன்னணி வீராங்கனையான ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பார்பரா கிரெஜ்சிகோவாவும் விலகியுள்ளார்.

    • அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்
    • தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.

    அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 6 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.

    20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
    • துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டாகினார்.

    • அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 64 ரன்கள் விளாசினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    டி20 உலகக் கோப்பையில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் கொல்கத்தாவில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பிரெண்டன் கிங், ஷாங் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரெண்டன் கிங் 30 பந்தில 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 22 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ரோவ்மன் பொவேல் 14 பந்தில் 24 ரன்களும், ரூதர்போர்டு 13 பந்தில் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் கர்ரி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    • முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது
    • மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது. 

    ×