search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    ஷ்ரேயாஸ் அய்யர்

    தரம்சாலா சென்றடைந்த இந்திய அணிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு

    தரம்சாலா சென்றடைந்த இந்திய அணிக்கு இமாச்சல பிரதேச மாநில பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    மூன்று வகை கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்பதாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று தரம்சாலா சென்றடைந்தனர். அவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு  அளிக்கப்பட்டது.

    ரோகித் சர்மா, ரிஷப் பந்த்

    ஒவ்வொரு வீரர்களுக்கும் மாலையுடன் தொப்பி அணிவிக்கப்பட்டது. வரவேற்பு அளிக்கப்பட்ட படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×