search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மண்டல தடகளம்
    X
    தென்மண்டல தடகளம்

    தென்மண்டல தடகளம்: தமிழக அணிக்கு 200 பேர் தேர்வு

    கர்நாடகாவில் நடைபெறும் தென்மண்டல தடகள போட்டியில் கலந்து கொள்ள தமிழகம் சார்பில் 200 பேர் தேர்வாகியுள்ளனர்.
    31-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200 பேர் தேர்வாகி உள்ளனர்.

    ஆண்கள் அணியில் அருண்குமார் (100 மீட்டர் ஓட்டம்), வால்டர் கண்டுல்னா (200 மீட்டர் ஓட்டம்), பாலாஜீவா (நீளம் தாண்டுதல்), சக்தி மகேந்திரன் (நீளம் தாண்டுதல்) உள்பட 103 வீரர்களும்,

    பெண்கள் அணியில் பவித்ரா (800 மீட்டர் ஓட்டம்), கிருத்திகா (2,000 மீட்டர் ஓட்டம்), சுபாஷினி (3,000 மீட்டர் ஓட்டம்) பபிதா (நீளம் தாண்டுதல்) ஷெரின் (நீளம் தாண்டுதல்), பபிஷா (டிரிபிள் ஜம்ப்) உள்பட 97 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×