search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொவேல்
    X
    வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொவேல்

    20 ஓவர்களும் வீசியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்: வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பொவேல்

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

    பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. அந்த அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 27 பந்தில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றம் அளித்தது. நாங்கள் 20 ஓவர்களும் பேட்டிங் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என 34 பந்தில் 54 ரன்கள் குவித்த பொவேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பொவேல் கூறுகையில் ‘‘எங்கள் கையில் போதுமான அளவு விக்கெட்டுக்கள் இருந்தன. பொல்லார்டு மற்றும் ஹெட்மையர் களத்தில் இருந்தனர். பிராத்வைட் மற்றும் கீமோ பால் ஆகியோர் பேட்டிங் செய்ய இருந்தனர். இவர்களால் நிச்சயம் இலக்கை எட்ட வைத்திருக்க முடியும்.

    இந்தியா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி பெற்றது. நாங்கள் அதுகுறித்து சிந்திக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தோம்’’ என்றார்.
    Next Story
    ×