என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செர்பியா பெண்கள் கைப்பந்து அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Byமாலை மலர்5 Aug 2019 11:52 AM GMT (Updated: 5 Aug 2019 11:52 AM GMT)
கைப்பந்து விளையாட்டுகளுக்கான தகுதிச்சுற்றில் பெண்கள் பிரிவில் செர்பியா அணி போலந்து அணியை வீழ்த்தியது, இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
வார்சா:
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான கைப்பந்து விளையாட்டின் தகுதிச்சுற்றுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் பெண்கள் பிரிவுக்கான சில ஆட்டங்கள் போலந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தலைநகர் வார்சாவில் செர்பியா அணியும் போலந்து அணியும் மோதின. இதில் செர்பியா அணி 21-25, 25-23, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
செர்பியா அணி இதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் பியுர்டோ ரீகோ அணிகளை வீழ்த்தியிருந்தது. இதே போன்று ஆண்கள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X