என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நட்பு ரீதியிலான போட்டி: பார்சிலோனாவை 2-1 என வீழ்த்தியது செல்சி
Byமாலை மலர்23 July 2019 12:47 PM GMT (Updated: 23 July 2019 12:47 PM GMT)
ஜப்பானில் நடைபெற்ற ப்ரீ-சீசன் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என வீழ்த்தியது செல்சி.
ஐரோப்பிய நாடுகளில் 2019-20-ம் ஆண்டுக்கான கிளப் கால்பந்து லீக் தொடர்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன் நட்பு ரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா - இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணிகள் மோதிய ஆட்டம் இன்று ஜப்பானில் நடைபெற்றது.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் செல்சி அணியின் டேமி ஆப்ரஹாம் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சி 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் நீண்டநேரம் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் செல்சி அணியின் ராஜ் பார்க்ளே ஒரு கோல் அடிக்க செல்சி 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) பார்சிலோனா அணியின் ராகிடிச் ஒரு கோல் அடித்தார்.
அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் செல்சி 2-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது.
அதனடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா - இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணிகள் மோதிய ஆட்டம் இன்று ஜப்பானில் நடைபெற்றது.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் செல்சி அணியின் டேமி ஆப்ரஹாம் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சி 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் நீண்டநேரம் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் செல்சி அணியின் ராஜ் பார்க்ளே ஒரு கோல் அடிக்க செல்சி 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) பார்சிலோனா அணியின் ராகிடிச் ஒரு கோல் அடித்தார்.
அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் செல்சி 2-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X