என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்-அகுட், நடால் - பெடரர் பலப்பரீட்சை
Byமாலை மலர்11 July 2019 11:03 AM GMT (Updated: 11 July 2019 11:03 AM GMT)
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜோகோவிச் - அகுட், நடால் - பெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
விம்பிள்டன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் டேவிட் கோபினை 6-4, 6-0, 6-2 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஜப்பானைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை நிஷிகோரி 6-4 எனக் கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட பெடரர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது மற்றும் 4-வது செட்டுகளை முறையே 6-4, 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.
4-வது காலிறுதியில் 3-ம் நிலை வீரரான ரபெல் நடால் தரைநிலை பெறாத சாம் குயெரியை எதிர்கொண்டார். இதில் நடால் 7-5, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடக்கும் அரையிறுதியில் ஜோகோவிச் - பாடிஸ்ட்டா அகுட், ரோஜர் பெடரர் - ரபெல் நடால் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாடிஸ்ட்டா அகுட் - குய்டோ பெல்லா ஆகியோர் மோதினார்கள். அகுட் முதல் இரண்டு செட்டுகளையும் 7-5, 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை பெல்லா 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 4-வது செட்டிற்கு சென்றது. ஆனால் 4-வது செட்டை அகுட் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் பெல்லாவை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அகுட் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஜப்பானைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை நிஷிகோரி 6-4 எனக் கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட பெடரர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது மற்றும் 4-வது செட்டுகளை முறையே 6-4, 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.
4-வது காலிறுதியில் 3-ம் நிலை வீரரான ரபெல் நடால் தரைநிலை பெறாத சாம் குயெரியை எதிர்கொண்டார். இதில் நடால் 7-5, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடக்கும் அரையிறுதியில் ஜோகோவிச் - பாடிஸ்ட்டா அகுட், ரோஜர் பெடரர் - ரபெல் நடால் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X