என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபா அமெரிக்கா கால்பந்து - பெரு அணியிடம் பொலிவியா தோல்வி
Byமாலை மலர்19 Jun 2019 7:49 AM GMT (Updated: 19 Jun 2019 7:49 AM GMT)
46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை தோற்கடித்தது.
மரக்கானா:
46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பெரு-பொலிவியா அணிகள் மோதின.
இதில் பொலிவியா 28-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தது. அதன்பின் பெரு வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணியின் குயெர்ரே ரோ (45-வது நிமிடம்), பர்பென் (55), எடிசன் புளோரஸ் (96) ஆகியோர் கோல் அடித்தனர். முடிவில் பெரு 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- வெனிசுலா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் கோலின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரேசில் அணி 69 சதவீதம் பந்தை கையாண்டது. ஆனால் கோல் அடிக்க முடியாததால் வீரர்கள், ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பெரு-பொலிவியா அணிகள் மோதின.
இதில் பொலிவியா 28-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தது. அதன்பின் பெரு வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணியின் குயெர்ரே ரோ (45-வது நிமிடம்), பர்பென் (55), எடிசன் புளோரஸ் (96) ஆகியோர் கோல் அடித்தனர். முடிவில் பெரு 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- வெனிசுலா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் கோலின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரேசில் அணி 69 சதவீதம் பந்தை கையாண்டது. ஆனால் கோல் அடிக்க முடியாததால் வீரர்கள், ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X